தருமபுரம் மடத்தையும் எங்களையும் ரவுடிகளிடம் இருந்து காத்த முதல்வருக்கு நன்றி- தருமபுரம் ஆதீனம்
சென்னை: தருமபுரம் மடத்தையும் எங்களையும் ரவுடிகளிடம் இருந்து காத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் கூறியிருப்பதாவது: தருமபுரம் மடத்தையும் எங்களையும் ரவுடிகளிடம் இருந்து மீட்டெடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,

ரவுடிகள் தருமபுரம் ஆதீனம் சம்பந்தமாக போலி ஆடியோக்களையும் வீடியோக்களையும் தயாரித்து மடத்தில் வேலை செய்வோருக்கு மன உளைச்சலை உண்டாக்கியுள்ளனர். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதால் காவல் துறையை நாங்கள் நாடினோம்.
தமிழக முதல்வரின் ஆணைப்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும் மடத்தின் பெருமையையும் காத்த காவல் துறைக்கு நன்றி. இவ்வாறு தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனம் சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இருந்து வருகிறார். இந்த நிலையில் மடாதிபதியின் சகோதரரும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் உள்ள விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும், இதனை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறி கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.
இந்த சம்பவத்தில் செம்பனார்கோயிலைச் சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெயசந்திரன், செம்பனார்கோயில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த. விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர் என்றும் புகார் தெரிவித்திருந்தார்.
இந்தச்சம்பவம் தொடர்பாக சிறப்புப் படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத்(32), சீர்காழி ஒன்றிய பா.ஜ.க. முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ்33), செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(39), தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களை நேற்று இரவு 10 மணிக்கு மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து 4 பேரும் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர் அகோரம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஆதீனம் உதவியாளர் செந்தில், மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 4 பேரையும் போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமறைவாக உள்ள அகோரம், ராதாநல்லூர் பகுதியை சேர்ந்தவர். ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். பாமகவில் இருந்து பாஜகவில் இணைந்தவர். கடந்த தேர்தல்களில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியர். அகோரம் மீது ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது?












Click it and Unblock the Notifications