Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்போதானே +2 ரிசல்ட் வெளியானது! அதற்குள் இப்படியா? வெளியான பரபரப்பு தகவல்.. மாணவர்கள் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிளஸ் டூ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி நடந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில மாணவ, மாணவியருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 8,36,593 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். இந்த முறை 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மொழித்தேர்வை எழுதவில்லை.

Did the wrong total numbers give to the students in Tamil Nadus 12th result 2023?

இதையடுத்து அவர்களை நேரில் சந்தித்து மற்ற தேர்வுகளை எழுத வைப்பதற்காக ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறையினர் தீவிரமாக முயற்சி செய்தனர். ஆனாலும் பலர் தேர்வு எழுத வர மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக திருத்தப்பட்டன.

திருத்தப்பட்ட வினாத்தாள் மதிப்பெண்களை இதையடுத்து தொகுக்கப்பட்டது. பின்னர் அவற்றை தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்து உள்ளனர். கடந்த மாதம் 8ம் தேதி இவர்களுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.67 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் எல்லா வருடம் போல இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள் இந்த ஆண்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.03 சதவிகிதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.38 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.மாணவர்கள் 91.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சியில் 97.85% பெற்று விருதுநகர் முதலிடம் பிடித்து உள்ளது. அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 96.45% பெற்று திருப்பூர் முதலிடம் பிடித்து உள்ளது.

12ம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 89.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை மாணவர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் சதம் அடித்தவர்கள் எண்ணிக்கை பின்வருமாறு:

1. தமிழ் 2
2. ஆங்கிலம் 12
3. இயற்பியல் - 812
4. வேதியியல் - 3909
5உயிரியல் - 1494
6.கணிதம் - 690
7.தாவரவியல் - 340
8 விலங்கியல் - 154
9. கணினி அறிவியல்- 4618
10. வணிகவியல் - 5678
11. கணக்குப் பதிவியல் - 6573
12 பொருளியல் - 1760
13. கணினிப் பயன்பாடுகள் - 4051
14. வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 1334

கடந்த மே-2022 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 23,957. இந்தாண்டு மார்ச் / ஏப்ரல் 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை. 32,501.

குளறுபடி: இந்த நிலையில்தான் பிளஸ் டூ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி நடந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. அதில், சில மாணவ, மாணவியருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி மாணவ, மாணவியர்களுக்கு சமீபத்தில் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. அதில் உள்ள கூட்டு மதிப்பெண்களை விட கடந்த ரிசல்ட்டில் வெளியான மதிப்பெண் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. 5-7 மதிப்பெண்கள் அதிகம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பல மாணவ, மாணவியருக்கு இந்த மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இணையத்தில் பதிவேற்றும் போது தவறு நடந்துவிட்டதா அல்லது வேண்டுமென்றே குளறுபடி செய்யப்பட்டு உள்ளதா என்ற விவாதம் இதனால் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+