தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கொரோனா கடுமையாக பாதிப்பு.. சென்னையில் நிலைமை என்ன.. விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு நிலவரத்தை மாவட்ட வாரியாக இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 28,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 236 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 23,515 பேர் மீண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 144547 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரத்தை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் 6 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்து உள்ளது 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

தமிழகத்திலேயே சென்னையில் தான் பாதிப்பு மிக உச்சபட்சமாக உள்ளது. சென்னையில் இன்று 7130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 2509 பேரும், செங்கல்பட்டில் 2279 பேரும், திருவள்ளூரில் 1768 பேரும், காஞ்சிபுரத்தில் 1089 பேரும், மதுரையில் 1068 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1000த்திற்குள் பாதிப்பு

1000த்திற்குள் பாதிப்பு

500 முதல் 1000 பேருக்கு தினசரி பாதிப்பு சுமார் 10 மாவட்டங்களில் காணப்படுகிறது. தஞ்சாவூரில் 897 பேர், திருச்சியில் 813 பேர், தூத்துக்குடியில் 884 பேர், திருநெல்வேலியில் 668 பேர், திருப்பூரில் 641 பேர், வேலூரில் 588 பேர், சேலத்தில் 639 பேர், திருவண்ணாமலையில் 578 பேர், கன்னியாகுமரியில் 515 பேர், ஈரோட்டில் 691 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக பாதிப்பு

அதிக பாதிப்பு

இதேபோல் இதர மாவட்டங்களில் 100 முதல் 500 வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூரில் 478 பேரும், தர்மபுரியில் 353 பேரும், திண்டுக்கல்லில் 351 பேரும், கிருஷ்ணகிரியில் 485 பேரும், தேனியில் 450 பேரும் தென்காசியில் 385 பேரும், கரூரில் 291 பேரும், ராணிப்பேட்டயில் 391 பேரும், திருவாரூரில் 302 பேரும் விருதுநகரில் 366 பேரும், விழுப்புரததில் 383 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் இன்று 56 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 20 பேர் , காஞ்சிபுரத்தில் 19 பேர், திருவள்ளூரில் 16 பேர், மதுரையில் 14 பேர்,வேலூரில் 15 பேர், திருச்சியில் 10 பேர், திருப்பத்தூரில் 9 பேர், கோவையில் 9 பேர் தஞ்சாவூரில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+