ஸ்டாலின், எடப்பாடி கொடுத்த ஆஃபர்.. திமுக பக்கம் சாய்கிறதா தேமுதிக? பிரேமலதா எடுத்த முடிவு!
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் தேமுதிக முதல்முறையாக திமுக கூட்டணியில் இணையும் சூழல் கனிந்து வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். கடந்த 2 சட்டசபைத் தேர்தலிலும் தேமுதிகவில் இருந்து எம்எல்ஏ-க்கள் உருவாகாததால், பிரேமலதா விஜயகாந்த் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு இன்னும் 1 மாதத்தில் வெளியாகவிருக்கும் சூழலில், திமுக மற்றும் அதிமுக தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துவிட்ட சூழலில், அடுத்ததாக தேமுதிகவும் இணையும் என்று கருதப்பட்டது. அதற்கேற்ப கடலூர் மாநாட்டில் தேமுதிகவினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

இந்த மாநாட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி முடிவை அறிவிக்கப் போவதாக கூறி இருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியின் கூட்டணி முடிவை அறிவிக்காத போது, நாம் மட்டும் ஏன் முந்திரிக் கொட்டை போல் அவசரமாக அறிவிக்க வேண்டும் என்று அவராகவே கேள்வி எழுப்பிக் கொண்டு, முடிவை ஒத்தி வைத்தார்.
அதேபோல் தேமுதிக மாநாட்டில் பேசிய விஜயபிரபாகரன் காங்கிரஸ் கட்சியை மட்டுமே விமர்சித்தார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சிக்கவில்லை. இதனால் தேமுதிக எந்தக் கூட்டணியில் இணையும் என்ற கேள்வி விவாதமாகி இருக்கிறது. அதேபோல் இரு கட்சிகளிடமும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பில் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்க முன் வந்துள்ளனர். ஆனால் திமுக தரப்பில் ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை கட்சித் தலைமை தெளிவாக கூறிவிட்டது. அதேபோல் அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலின் போதே தேமுதிக கூட்டணி அமைத்தது. பாமக வெளியேறிய போதும், தேமுதிக எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தது.
அந்த நம்பிக்கை காரணமாகவே எடப்பாடி பழனிசாமி இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், ராஜ்ய சபா சீட் கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் தேமுதிகவுக்கு உறுதி கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் விஜயபிரபாகரன் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகிறார் என்றும் அக்கட்சியின் கூறுகின்றனர்.
ஆனால் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணி பக்கம் செல்லலாம் என்ற யோசனையில் இருக்கிறார். ஏனென்றால் கடந்த 2 சட்டசபைத் தேர்தலிலும் தேமுதிகவால் ஒரு எம்எல்ஏவை கூட உருவாக்க முடியவில்லை. இதனால் திமுக பக்கம் சென்றால் நிச்சயம் சில எம்எல்ஏ-க்களை உறுதியாக பெற முடியும் என்று பிரேமலதா நம்புவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications