தன் இறுதி சடங்குல கூட சமஸ்கிருதமோ மற்ற மொழிகளோ வரக்கூடாது.. தமிழில் மட்டுமே செய்ய சொன்ன விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய இறுதி சடங்குல கூட சமஸ்கிருதமோ மற்ற மொழிகளோ வரக்கூடாதுன்னு சொல்லி தமிழில் மட்டுமே செய்ய சொல்லியிருக்கிறார் விஜயகாந்த் .. இதை தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரோகிதம் செய்தவர் கூறியிருக்கிறார்.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 30ம் தேதி காலை உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அவருக்கு விடை கொடுத்தனர்.

dmdk leader Vijayakanth had said that should be use in his funeral rites only in Tamil

இரண்டு நாட்களாக விஜயகாந்த் தான் மக்களின் பேசுபொருளாக இருந்தார். அவர் செய்த தர்மங்கள், உதவிகள், காட்டிய அன்புகள் எல்லாமே நேற்று தான் தெரிந்தது. அவரை திட்டமிட்டு தவறாக சித்தரித்தவர்கள் கூட நேற்று விஜயகாந்தை புகழ்ந்து பாராட்டினார்கள். விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் அவர் பெரிதும் நேசித்த கோயம்பேடு மண்டபத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

வாழ்நாள் முழுவதும் பலரது பசியை போக்கிய விஜயகாந்த், தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் திரைக்கலைஞர்கள், ஏழைகளுக்கு செய்தார். சினிமாவில் சாதித்த அவர், அரசியலில் சாதிக்க முடியாமல் போக, இங்குள்ள சூழ்ச்சிகளை பற்றி தெரியாதது தான். விஜயகாந்த் தீவிர அரசியலில் இருந்த காலக்கட்டத்தில் அவரை, சிலர் தெலுங்கன் என்று விமர்சனமும் செய்தார்கள். மேலும் குடிகாரர் என்றும் இழிவான விமர்சனங்களை வைத்தார்கள். வெள்ளந்தியான அந்த மனிதரை கோபப்பட வைத்து அதை ஊடகங்களில், சமூக ஊடகங்களில் ஜோக்கர் போல சித்தரிக்க முயன்றார்கள்.

இந்நிலையில் தன் மீதான மோசமான விமர்சனங்களை மிகவும் பக்குவமாக கையாண்டார். தன்னை தனிப்பட்ட முறையில் மோசமாக விமர்சித்தவர்களை ஒருபோதும் அவர் விமர்சிக்கவே இல்லை. அவரது பக்குவம் நிச்சயம் ஆச்சர்யமான ஒன்று. விஜயகாந்த் மறைந்த பின்னர் அவரது இறுதி சடங்கு குறித்து வெளியான தகவல் ஒன்று பலரையும் நெகிழ வைத்துள்ளது.

தன்னுடைய இறுதி சடங்குல கூட சமஸ்கிருதமோ மற்ற மொழிகளோ வரக்கூடாதுன்னு சொல்லி தமிழ்ல மட்டுமே செய்ய சொல்லியிருக்கிறார் விஜயகாந்த் .. இதை தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரோகிதம் செய்தவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக புரோகிதம் செய்தவர் அளித்த பேட்டியில், கேப்டன் விஜயகாந்த், நாயுடு என்ற சமூகத்தைச் சேர்ந்தவர். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றால், வைணம் என்று சொல்லக்கூடிய பெருமாளுக்கு உரிய நாமங்களை படித்து அவருக்கு மேற்கொள்ள வேண்டிய இறுதி சடங்கை மேற்கொள்ள சொல்லியிருந்தார்கள்.

அதேசமயம் அந்த வைணவ சமயத்தில் பாடக்கூடிய பாடல்கள் அனைத்துமே தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லியிருந்தார்கள்.. உதாரணத்திற்கு சமஸ்கிருதமோ, தெலுங்கோ இல்லாமல் தமிழ் முறைப்படி மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர்கள் என்னிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்கள்.. நாங்கள் அதற்கு ஏற்றார் போல், எம்பெருமான் நாராயணனின் திருவடியை போற்றியும் , சிவ பெருமான் திருவடியை போற்றியும் திருப்பாவை என்று சொல்லக்கூடிய திவ்ய பிரபந்தம், தேவராமும், திருவாசகமும் படித்து அய்யாவின் (விஜயகாந்தின்) இறுதி சடங்கை மேற்கொண்டோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+