கேப்டன் ரிட்டன்ஸ்...! சென்னை விமான நிலையத்தில் குவிந்த தொண்டர்கள், உற்சாக முழக்கம்
Recommended Video

சென்னை: சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார்.

விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருடைய குரல் தொடர்ந்து மோசமானதையடுத்து, அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்ததும் இந்தியா திரும்பிய அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இதனிடையே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து.. மீண்டும் அவர் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார்.
சிகிச்சை முடிந்து பிப்ரவரி 16ம் தேதி விஜயகாந்த் சென்னை திரும்புவார் என்று தேமுதிக தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தின் வழி நெடுகிலும் திரண்ட தொண்டர்கள் விஜயகாந்தை சிறப்பாக வரவேற்றனர்.
லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளும் மும்முரமாக களத்தில் இறங்கி உள்ளன. தற்போது விஜயகாந்தின் வருகையை தொடர்ந்து... தமிழக அரசியல் நிலவரம் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.
— Vijayakant (@iVijayakant) February 14, 2019












Click it and Unblock the Notifications