காலிங் பெல்லை அடித்ததும் கதவை திறந்த திமுக பிரமுகர் வெட்டி படுகொலை.. திருவொற்றியூரில் பயங்கரம்
சென்னை: சென்னை திருவொற்றியூர் அருகே திமுக பிரமுகர் காமராஜை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடசென்னையில் திருவொற்றியூர் அருகே விம்கோ நகரை சேர்ந்தவர் காமராஜ். இவர் திமுகவில் இருந்தார். இவர் அரசு ஒப்பந்ததாரரும் கூட! இன்று காலை காமராஜின் வீட்டின் காலிங் பெல்லை யாரோ அடித்தனர்.

காமராஜ் கதவை திறந்ததும் அங்கிருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த காமராஜை மீட்ட அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட காமராஜ், சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரித்து வருகிறார்கள். மேலும் காமராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து எண்ணூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு ஒப்பந்ததாரர் என்பதால் காமராஜுடன் அந்த கும்பலை சேர்ந்தவர்களுக்கு ஏதேனும் முன்விரோதம் இருந்ததா என விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications