திமுக கூட்டணியில் மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட்? நாளை இறுதி முடிவு
சென்னை: கூட்டணியில் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எத்தனை சீட்? என்பது தொடர்பாக நாளை திமுக முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்படும் என்று கடந்த மாதம் 20ம் தேதி அறிவிப்பு வெளியானது. ஆனால், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு எத்தனை சீட் என அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து அவர்களுடன் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதேபோல பாரிவேந்தரின், இந்திய ஜனநாயக கட்சியும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதையொட்டி நாளையே அனைத்துக் கூட்டணிகளையும் இறுதி செய்ய ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதனிடையே இன்று காலை 11 மணியளவில், அண்ணா அறிவாலயத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வந்தார். அவரை இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் சந்தித்து தங்கள் கட்சியின் ஆதரவை திமுகவிற்கு வழங்குவதாக அறிவித்தார்.
இதனிடையே, நாளையே விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியாக உள்ளது. பிற கட்சிகளுக்கு தலா 1 இடமும், மதிமுகவிற்கு ஈரோடு உட்பட 2 தொகுதிகளும் வழங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
விருதுநகர் அருகே திமுக தென் மண்டல மாநாடு மார்ச் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க வசதியாக, கூட்டணியை நாளையே இறுதி செய்துவிடலாம் என ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications