திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஓவர்.. மாணிக்கம் தாகூர் ரியாக்ஷனை பார்த்தீங்களா!
சென்னை: ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து பேசி வந்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில், தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்பதில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட கதர் தலைகள் சிலர் உறுதியாக இருந்தனர். ஆனால், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் இதனை ஏற்கவில்லை. இருப்பினும், மாணிக்கம் தாகூர் கூட்டாளிகள் விட்டபாடில்லை.

இந்த விஷத்திற்கு முதலமைச்சர் நேரடியாக நோ சொன்னாலும் கூட, இவர்கள் விடவில்லை. இப்படி இருக்கையில், திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டிருக்கிறது.
படித்ததில் பிடித்தது 👇 pic.twitter.com/U5iUYlSeSw
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) March 4, 2026
இந்நிலையில், மாணிக்கம் தாகூர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. இன்று இல்லாமல் இருக்கலாம், ஆனால், என்றாவது ஒரு நாள் என்று பொருள்படும் வகையில் படம் ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications