Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த பிரமாண்டத்துக்கு தயாராகும் திமுக.. பிப்ரவரி 8ல் ஸ்டாலின் தலைமையில் பூத் முகவர்கள் மாநாடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிப்ரவரி 8 ஆம் தேதி திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக தேர்தல் முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பிப்ரவரி மாதம் முழுவதும் அடுத்தடுத்து மாநாடு நடத்துகிறது திமுக.

திமுக, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர மும்முரம் காட்டி வருகிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் நான்கு மண்டலங்களிலும் மாநாடுகள் நடத்தி பல லட்சம் பேரை திரட்டி திமுகவின் செல்வாக்கை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

dmk Tiruvannamalai udhayanidhi stalin

திருவண்ணாமலையில் அண்மையில் திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொங்கு மண்டலத்தை குறி வைத்து "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற பெயரில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக டெல்டா மண்டலத்தை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளனர்.

வரும் ஜனவரி 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி தலைமையில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தி.மு.க டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+