ரவுண்டு கட்டிய போட்டோகிராபர்கள்! ஏன் இப்படி? ஒரு போட்டோ போதும்பா! வெட்கத்தில் சிரித்த துரைமுருகன்!
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனை அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள் வளைத்து வளைத்து படம் பிடித்தனர்.
ஏன் இப்படி என அவர்களை நோக்கி தனது கைகளால் சைகை காட்டிய அவர், ஒரு புகைப்படம் எடுத்தாம் போதுமே எனக் கூறியதுடன் வெட்கத்தில் சிரித்தார்.
இதேபோல் மேடையில் முதல்வர் ஸ்டாலின் அந்தப் பக்கம் திரும்பிய போது, சார் சார் எனக் கோரஸாக குரல் எழுப்பி அவரையும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்த நிகழ்வு நடந்தது.

மாவட்டச் செயலாளர்கள்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. அந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் அங்கு படம் பிடித்துக்கொள்ள 5 நிமிடங்கள் நேரம் கொடுக்கப்பட்டது. அப்போது பளிச் பளிச் என பிளாஷ் போட்டு படங்களை எடுத்த போட்டோகிராபர்கள் மேடையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதல்வர் ஸ்டாலின் உட்பட அங்கிருந்தவர்கள் அனைவரையும் படங்கள் எடுத்தனர்.

வளைத்து வளைத்து
அப்போது நேரமாகிவிட்டது வாருங்கள் என திமுக தலைமை நிலையச் செயலாளரும், வீட்டுவசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகன் அவர்களை வெளியேறுமாறு அழைப்பு விடுத்தார். ஆனாலும் மேடையை நோக்கி வளைத்து வளைத்து சிலர் படமெடுக்க, அப்போது ஏன் இப்படி ஒரு படம் போதுமே என்கிற வகையில் கரங்களால் சைகை காட்டினார் துரைமுருகன். ஆனால் அப்போதும் விடுவமா நாங்கள் என்கிற வகையில் துரைமுருகனை ரவுண்டு கட்டினர். இதனால் அவரே வெட்கப்பட்டு சிரித்த நிகழ்வும் நடந்தது.

சார் சார்
இதேபோல் வழக்கமாக சிரித்த முகத்துடன் காணப்படும் முதல்வர் ஸ்டாலின், இன்றைய தினம் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சற்று இறுக்கமாக இருந்தார். வலது பக்கமும், இடது பக்கமும் அவர் திரும்பி பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரையும் போட்டோகிராபர்கள் விடவில்லை. சார் சார் ப்ளீஸ் எனக் கூப்பிட்டு முதல்வரையும் போஸ் கொடுக்க வைத்தார்கள்.

ஸ்டாலின் கடுமை
இதனிடையே கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் நாற்காலிகளில் சாவகாசமாக சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த மாவட்டச் செயலாளர்கள் பலரும், ஸ்டாலினின் கோபம் கொப்பளிக்கும் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போய் நிமிர்ந்து அமர்ந்தனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை இவ்வளவு தூரம் ஸ்டாலின் கோபப்பட்டதை கண்டு கூட்டம் முடிந்த பின்னரும் பலருக்கும் அதிர்ச்சி விலகவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications