சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியின் கண்காணிப்பு வளையத்திற்குள் துரைமுருகன்.. கோப்பை தூசு தட்டி வரும் வருமான வரித்துறை..!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் டெல்லியின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதை அவரைச் சுற்றி நடக்கும் சமீபத்திய நிகழ்வுகள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

இதுவரை இல்லாத வகையில் தமிழக அரசியலிலும், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளது பாஜக தேசியத் தலைமை.

ஆட்சியில் இல்லாதபோதே மத்திய அரசை கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்து வரும் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்துவிட்டால் இன்னும் குடைச்சல் கொடுக்கக்கூடும் என நினைக்கிறது பாஜக தலைமை.

இருக்கிற அணிகள் போதாதுன்னு இதுவேறயா... திமுகவில் உருவாகுதாம் சோசியல் மீடியா விங்?இருக்கிற அணிகள் போதாதுன்னு இதுவேறயா... திமுகவில் உருவாகுதாம் சோசியல் மீடியா விங்?

துரைமுருகன்

துரைமுருகன்

வேலூர் மாவட்ட திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனின் தூக்கத்தை கலைத்துள்ளது. துரைமுருகன் திமுக பொருளாளராக இருந்தவரை கூட விட்டுப்பிடித்து வந்த டெல்லி இப்போது பொதுச்செயலாளராக வந்த பின்பு கடும் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது துரைமுருகன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பண விவகாரம் இப்போது கிளறப்பட்டு வருகிறது.

உளவுத்துறை

உளவுத்துறை

துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த நிலையில் அவரது நடவடிக்கைகள் தீவிரமாக நோட்டமிடப்பட்டுள்ளன. இதனிடையே தனது அறைக்குள் அத்துமீறி நுழைந்த உளவுத்துறையினர் தன்னை மிரட்டியதாக நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் புகார் எழுப்பிய நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் இல்லம் சிபிஐ அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

ஏன் சோதனை

ஏன் சோதனை

கதிர் ஆனந்த வேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் அவருக்கான தேர்தல் பணிகள் மற்றும் பண பரிவர்த்தனைகளை கவனித்துக்கொண்டவர் தான் பூஞ்சோலை சீனிவாசன். துரைமுருகனின் மிகவும் நம்பிக்கைக்குரியவர் என்பதால் அவர் மூலமே பணப்பரிமாற்றங்கள் நடந்திருக்கிறது. இப்படி தனக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வுகளால் துரைமுருகன் அப்செட்டில் இருக்கிறார்.

துரைமுருகன் அல்ல

துரைமுருகன் அல்ல

துரைமுருகனை பொறுத்தவரை இப்போது தனி நபர் இல்லை, அவர் திமுகவின் பொதுச்செயலாளர். அவரை சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் துரைமுருகன் இமேஜுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாது, அது திமுகவுக்கும் சேர்ந்தே ஏற்படும். இப்படி பல கணக்குகளின் அடிப்படையில் அரசியல் ஆடுபுலி ஆட்டத்தை தமிழகத்தில் நடத்த தொடங்கிவிட்டது டெல்லி.

English summary
Dmk General Secretary Duraimurugan within the surveillance ring of Delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X