எங்களுக்கு B டீமா..? “மண் குதிரை” ஓபிஎஸ்.. கடுமையாக விமர்சித்த திமுக! ஆஹா.. மொத்தமும் போச்சே!
ஓ.பன்னீர்செல்வத்திற்கு திமுக ஆதரவு கொடுத்து வருவதாக ஈபிஎஸ் தரப்பு விமர்சிக்கும் நிலையில் திமுகவும் ஓபிஎஸ்ஸை விமர்சித்துள்ளது.
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் பி டீம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில் ஓபிஎஸ் ஒரு மண் குதிரை என்ற திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
அதிமுகவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகப் பேசி வரும் எடப்பாடி அணியினர், ஓபிஎஸ்ஸுக்கு பின்னணியில் திமுகவின் கை இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.
திமுக அரசை கடுமையான சொற்களில் ஓபிஎஸ் விமர்சிக்காததற்கும் அதுதான் காரணம் எனக் கூறி வருகின்றனர். மேலும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஓபிஎஸ்ஸுக்கே சபாநாயகர் ஒதுக்கியதையும் விமர்சித்தனர்.

அட்டாக் செய்த ஈபிஎஸ் தரப்பு
அதிமுகவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் மோதல் வெடித்த நிலையில், ஓபிஎஸ் திமுகவோடு மறைமுக கூட்டு வைத்து அதிமுகவுக்கு துரோகம் செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியை பற்றி ஓபிஎஸ் புகழ்ந்த பேசியதைச் சுட்டிக்காட்டி, ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்தனர். தீய சக்தி என்று ஜெயலலிதா தன் வாழ்நாளெல்லாம் விமர்சித்த தலைவரை ஓபிஎஸ் எப்படி பாராட்டலாம் என கண்டித்தனர்.

திமுகவின் பி டீம்
மேலும், தேனி நாடாளுமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் மகனுமான ஓபி ரவீந்திரநாத் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியதோடு திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று தெரிவித்தது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு அவல் கிடைத்தது போல அமைந்தது. திமுகவுடன் ஓபிஎஸ் மறைமுக கூட்டு வைத்திருப்பதற்கு இதுவே சான்று என ஈபிஎஸ் தரப்பினர் விமர்சித்தனர். உச்சமாக, ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என்று எடப்பாடி பழனிசாமியே கூட்டங்களில் பேசி வந்தார். ஓ.பன்னீர்செல்வமும் திமுகவை ஈபிஎஸ் போல கடுமையாக விமர்சிக்காமலேயே இருந்து வந்தார்.

எட்டப்பர்கள்
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில், உச்ச நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்த நிலையில், திமுகவின் பி டீமாக இருந்து செயல்பட்ட எட்டப்பர்களின் முகத்திரை கிழிந்தது என்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அந்தளவுக்கு திமுக ஓபிஎஸ்ஸின் பின்னணியில் இருப்பதாக தொடர்ச்சியாக ஈபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விளாசிய நிலையில், ஓபிஎஸ்ஸையும் சாடினார். "பாஜக என்பது ஆடியோ, வீடியோவை வைத்து மிரட்டுகின்ற கட்சி, பாஜக என்பது கவர்னர் டிரெயினிங் சென்டர். ஓ.பன்னீர்செல்வம் கவர்னராக விரைவில் அறிவிக்கப்படலாம், அவருக்கு வாழ்த்துகள். எடப்பாடி பழனிசாமி பாஜக தலைவராகிவிடுவார்" எனப் பேசினார்.

கவர்னர் பதவி
இந்நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியும், ஓ.பன்னீர்செல்வத்தை அட்டாக் செய்துள்ளது. முரசொலி நாளேட்டில், பட்டிக்காடும் பட்டணமும் என்கிற தலைப்பில் ஒரு பத்தி வெளியாகியுள்ளது. அதில், ஒரு நாளேட்டில் வெளியான கார்ட்டூன் பற்றி இருவர் பேசும் வகையில் உள்ளது. "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஓபிஎஸ் கவர்னராக பதவி ஏற்பார் என்று சொல்லிவிட்டார். அதனால் பி டீம் எனது குற்றம் சாட்டப்பட்டவருக்கு பரிந்துரை செய்கிறார் என்று அந்த கார்ட்டூனில் குறிப்பிட்டுள்ளனர். மத்திய பாஜக ஆட்சியில் கைவிடப்பட்டவர்களுக்கும் பரிந்துரை உள்ளவர்களுக்கும் கவர்னர் பதவி என்பது சூசகமாக பிடித்துக் காட்டி இருக்கிறார் உதயநிதி.

ஓபிஎஸ் ஒரு மண் குதிரை
ஓபிஎஸ் தனது மகனை அன்றி வேறு யாருக்கு சாதகமாக அரசியல் செய்கிறார் என்பது அவருக்கே தெரியாது. அவர் யாருக்கு வேண்டுமானாலும் பி டீமாக இருந்து விட்டுப் போகட்டும். நிச்சயமாக திமுகவுக்கு இல்லை. காரணம், திமுக எதைச் செய்தாலும் அனைவருக்கும் தெரிய வெளிப்படையாகத் தான் செய்யும் என்பதை தமிழர்கள் அறிவார்கள். மேலும் ஓபிஎஸ் ஒரு மண் குதிரை என்று எல்லோரும் அறிந்து வைத்திருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லையே என்பது சோகம் தானே?" என கிண்டல் செய்துள்ளது முரசொலி.
-
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி











Click it and Unblock the Notifications