கருணாநிதி நினைவு தினம்.. பிரம்மாண்டமாக நடக்கும் "கலைஞர் மாரத்தான்".. பரிசுத் தொகை அறிவிப்பு!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. அந்த நாளில் அவரது நினைவை போற்றும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

மாரத்தான் போட்டி
இந்த நிலையில் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி திமுக சார்பாக கலைஞர் மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மெய்நிகர் வடிவில் நடத்தப்பட்டு வந்த இந்த மாரத்தான் போட்டி, இம்முறை நேரடியாக நடைபெற உள்ளது. இதற்காக பிரத்யேக தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

4 பிரிவில் போட்டி
இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்க கலைஞர் மாரத்தான் தளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். பதிவுக் கட்டணமாக 42 கி.மீ. தொலைவு கொண்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்க ரூ.500ம், 21 கி.மீ. தொலைவு கொண்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்க ரூ.300ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 10 கி.மீ. மராத்தான் மற்றும் 5 கி.மீ. மாரத்தான் போட்டிகளும் நடைபெறுகின்றன.
கலைஞர் நினைவு சர்வதேச மாரத்தான் 2022 ஆண்டில் சேகரிக்கப்படும் அனைத்து பதிவுக் கட்டணங்களும், வசதியற்ற குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காகச் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி எங்கு?
அதேபோல் முன்பதிவு செய்து மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு டி ஷர்ட்டும், மாரத்தான் போட்டிக்கான உபகரணங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் தொடங்கும் மாரத்தான் போட்டி பட்டிணப்பாக்கம், பெசண்ட் நகர் வழியாக மீண்டும் கலைஞர் நினைவிடத்தில் முடியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

பரிசுத் தொகை அறிவிப்பு
அதேபோல் 42 கி.மீ. தொலைவு கொண்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே பரிசுத்தொகை 21 கி.மீ. தொலைவு மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்களுக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் 10 கி.மீ. மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்கள் பிடித்து வெற்றிபெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 5 கி.மீ. மாரத்தான் போட்டியில் வெற்றிபெறுவோருக்கு ரூ. 25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications