தொடக்கமே 'அதகளம்'... தபால் வாக்குகளில் திமுக லீடிங்.. சறுக்கும் அதிமுக வேட்பாளர்கள்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில், தொடக்கத்திலேயே திமுக முன்னிலை பெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று (மே.2) தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டுக்கான தலையெழுத்தை நிர்ணயிக்கும் பொருட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில் பல இடங்களில் திமுக முன்னனிலை பெற்றுள்ளது.

திமுக லீடிங்
காலை 8:50 மணி நிலவரப்படி, மொத்தம் 21 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், 17 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 4 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

செல்லூர் ராஜு லீடிங்
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா முன்னிலை பெறுகிறார். மதுரை மேற்கில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு முன்னிலை பெறுகிறார்.

அதிமுக முன்னிலை
திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு முன்னிலை பெறுகிறார். கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னனிலையில் உள்ளார். குமாரபாளையம், ஆரணி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

மா.சுப்ரமணியன் லீடிங்
எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னனிலையில் இருக்கிறார். சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியன் முன்னிலையில் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications