திமுக எம்பி, எம்எல்ஏ-க்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் 23 ஆம் தேதி நடக்கிறது.. துரைமுருகன் அறிவிப்பு!
சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

"கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தி.மு.க. மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 23.09.2025 செவ்வாய் கிழமை, காலை 10.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும். அதுபோது, தி.மு.க. மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications