திமுக பொதுக்குழு சுவாரஸ்யம்... துரைமுருகனுக்கு 218 பேர்.. டி.ஆர். பாலுவுக்கு 125 பேர்..!
சென்னை: திமுக பொதுக்குழுவில் துரைமுருகன் பொதுச்செயலாளராக வர வேண்டும் என 218 பேர் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.
இதேபோல் டி.ஆர்.பாலு திமுக பொருளாளராக வர வேண்டும் என 125 பேர் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் அவரை ஆதரித்திருக்கின்றனர்.
இந்த தகவலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழு மேடையில் அறிவித்ததோடு அவர்கள் இருவரையும் எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை எனக் கூறினார்.

உணர்ச்சி பொங்க
திமுக பொதுக்குழு இன்று காலை சரியாக 10 மணிக்கு தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்பதற்காக 9.40 மணிக்கெல்லாம் துரைமுருகன் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கிற்கு வருகை தந்தார். காரில் இருந்து இறங்கிய அவரிடம் வழக்கமான குறும்பு சிரிப்பு இல்லை. முகத்தை மிகவும் உணர்ச்சிப் பொங்க வைத்திருந்த அவர் தனது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. சகிதம் பொதுக்குழு அரங்கிற்குள் நுழைந்தார். அவரை மேடையில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார் பூச்சி முருகன்.

இருவரும் பேச்சு
துரைமுருகன் வருகை தருவதற்கு முன்பாகவே அண்ணா அறிவாலயம் வந்த டி.ஆர்.பாலு ஏற்கனவே அந்த அறையில் அமர்ந்திருந்தார். இருவரும் மிகவும் உணர்ச்சிப் பொங்க பேசிக்கொண்டிருந்தனர். மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கிற்கு வந்த தகவலறிந்து அவர்கள் இருவரும் வணக்கம் தெரிவித்து வரவேற்க முயன்றனர். ஆனால் அவர்கள் இருவரையும் அறைக்குள் இருக்குமாறும் தலைவர் உங்கள் பெயரை குறிப்பிட்டவுடன் வந்தால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஸ்டாலின் அறிவிப்பு
திமுக பொதுக்குழு வரவேற்பு உரை ஆற்றிய ஆர்.எஸ்.பாரதி புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு விவகாரம் பற்றி தலைவர் அறிவிப்பார் என தனது உரையை முடித்துக்கொண்டார். இதையடுத்து மைக் பிடித்த ஸ்டாலின் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் வர வேண்டும் என 218 பேர் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் இருக்கிறார்கள். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத காரணத்தால் பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவும் துரைமுருகன் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார் என அறிவித்தார்.

சால்வை அணிவித்து
இதையடுத்து அறையில் இருந்து நெகிழ்ச்சியுடன் மேடைக்கு வந்த துரைமுருகன் ஸ்டாலின் அணிவித்த சால்வையை ஏற்றுக்கொண்டு உருக்கமுடன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சைகையில் நன்றி தெரிவித்தார். இதேபோல் அடுத்ததாக டி.ஆர். பாலு பொருளாளராக வர வேண்டும் 125 பேர் முன் மொழிந்தும் வழிமொழிந்தும் உள்ளதாக கூறிய ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் அவர்கள் இருவரையும் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு இரண்டு புறமும் கே.என்.நேரு அழைத்துச்சென்று அமரவைத்தார்.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்! -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு?












Click it and Unblock the Notifications