விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து செஞ்சி மஸ்தான் அதிரடி நீக்கம்! திமுகவில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து செஞ்சி மஸ்தான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த நா. புகழேந்தி மறைவெய்திய காரணத்தால் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற டாக்டர் கவுதம சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

dmk gingee masthan villupuram

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அது போல் மற்றொரு அறிவிப்பில், விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பணியாற்றி வரும் செஞ்சி கே.மஸ்தானை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக டாக்டர் ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படுகிறது.

கருணாநிதி காலத்திலிருந்து திமுகவில் இருக்கும் செஞ்சி மஸ்தான் தற்போது அமைச்சராகவும் உள்ளார். அவரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது ஏன் என்பது குறித்து தெரியவில்லை. விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் செஞ்சி மஸ்தானின் மாற்றம் என்பது முக்கியவத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+