"இந்தியா" கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார் தெரியுமா? தருமபுரி திமுக எம்பி.யின் பரபர ட்வீட்
சென்னை: "வருங்கால பிரதமர் உடன் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில்" என திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது "இந்தியா" கூட்டணிக்குள் புதிய விவாதங்களை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
"இந்தியா" கூட்டணி என்பது பாஜகவுக்கு எதிரான பிரதான எதிர்கட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை விரைவாக தொடங்குவது எனவும் "இந்தியா" கூட்டணி முடிவு செய்துள்ளது.

"இந்தியா" கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக்க அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என அக்கட்சித் தலைவர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். அதேநேரத்தில் நிதிஷ்குமாரை 'இந்தியா" கூட்டணி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த ஜேடியூ முயற்சிக்கிறது.
இந்த பிரதமர் வேட்பாளர் பஞ்சாயத்து இப்போது வேண்டாம்... லோக்சபா தேர்தல் முடியட்டும்.. அப்போது பார்க்கலாம் என்பது "இந்தியா" கூட்டணி கட்சிகள் பலவற்றின் நிலைப்பாடு. திமுகவைப் பொறுத்தவரை கடந்த தேர்தலின் போதே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என முதன் முதலில் அறிவித்தது. ஆனால் "இந்தியா" கூட்டணி உருவான பின்னர் பிரதமர் வேட்பாளர் குறித்து திமுக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
வருங்கால #பிரதமர் உடன் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில். pic.twitter.com/8HU3OmcirP
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) September 19, 2023
இந்நிலையில் லோக்சபா திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார், "வருங்கால பிரதமர் உடன் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில்" என ராகுல் காந்தியுடன் இன்று எடுத்துக் கொண்ட படத்தை தமது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் இன்று முதல் சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறுகிறது. அப்போது எடுக்கப்பட்ட படத்தைத்தான் இப்படி ஒரு வாசகத்துடன் டாக்டர் செந்தில் குமார் பதிவிட்டுள்ளார். அதேநேரத்தில் திமுக அதிகாரப்பூர்வமாக பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்காத நிலையில், வருங்கால பிரதமர் ராகுல் காந்தி! என்கிற திமுக எம்பியின் முழக்கம் "இந்தியா" கூட்டணிக்குள் புதிய சலசல்லப்புக்கு காரணமாக அமையும் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள். டாக்டர் செந்தில்குமாரின் இந்த ட்விட்டர் பக்கத்தில் ராகுல்தான் பிரதமர் என்ற கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications