திமுகவின் ரூ. 1 கோடி புயல் நிவாரண நிதி.. முதல்வரிடம் வழங்கினார் துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கஜா நிவாரணத்திற்கு அதிகரிக்கும் நிதி... முதல்வரிடம் வழங்கப்பட்ட திமுகவின் 1 கோடி- வீடியோ

    சென்னை : கஜா புயல் பாதிப்புக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரண நிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று திமுக பொருளாளர் துரைமுருகன் வழங்கினார்.

    கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்றும், சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க உதவும் வகையிலும், மறுசீரமைப்பு, மறு கட்டமைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் நிதி வழங்கப்படுகிறது எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    Dmk Treasurer Duramurugan meets Cm Palanisamy

    [கஜா புயல் நிவாரணம்.. குவிகிறது உதவிகள்.. தீயாய் வேலை செய்யும் சமூக வலைதளங்கள் ]

    இந்தநிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க. பொருளாளர் துரை முருகன் சந்தித்து நிவாரண நிதியை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது : புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும். மேலும் மத்திய அரசிடம் தைரியமாக நிதி கேட்டால் தேவையான நிதி கிடைக்கும் என்றார்.

    இதே போல், கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சார்பில் அவர்களின் ஒரு மாத ஊதியம் நிதியாக தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+