திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட்
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள 5 தொகுதிகளை இறுதி செய்வதில் தான் இழுபறி நீடித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. அதேபோல் ஓரிரு நாட்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட ஆயத்தமாகி வருவதும் தெரிய வந்திருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும், விசிகவுக்கு 8 தொகுதிகளும், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கொமதேக, மமக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், முக்குலத்தோர் புலிப்படை, மஜக, தமிழர் தேசிய கட்சி உள்ளிட்டோருக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்தெந்த தொகுதிகளில் எந்தக் கட்சி போட்டியிடும் என்ற முடிவு எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி காங்கிரஸ் கொடுத்துள்ள விருப்ப தொகுதிகளின் பட்டியல் வைத்து திமுக ஆலோசனை நடத்தியது.
இதன்பின் நேற்றிரவு முதலே அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் தரப்பில் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, ராஜேஷ் குமார் உள்ளிட்டோரும், திமுக தரப்பில் சீனியர்களும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி நேற்றிரவு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டது.
ஆனால் மீதமுள்ள 5 தொகுதிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். ஆனாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை பேசுகையில், திமுக உடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.
தென்காசி, விருத்தாச்சலம் தவிர 16 தொகுதிகளை மீண்டும் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. தோழமை கட்சிகள் கேட்டு கொண்டதால், 2 தொகுதிகளை திமுகவால் கொடுக்க முடியவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் பெற்றுள்ளோம். 28 தொகுதிகளில் 23 தொகுதிகளை அடையாளம் கண்டுவிட்டோம். கன்னியாகுமரியில் 3ல் போட்டியிடுகிறோம்.
சிட்டிங் எம்எல்ஏ தொகுதியை கொடுப்பதில் சிக்கல் உள்ளது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியை கேட்கிறார்கள். அதனை நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவோம் என்றும் உறுதி செய்துள்ளார்.
-
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications