தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறையா? ஓரிரு நாளில் அரசு முடிவு? மாணவர்கள் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

அக்டோபர் 24 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம்.

Do Tamilnadu government extend Deepavali holiday one more day?

இதனால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 தினங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த செவ்வாய்கிழமை வேலை நாள் என்பதால் திங்கள்கிழமை இரவே சொந்த ஊர் சென்றவர்கள் அடித்துபிடித்துக் கொண்டு சென்னை திரும்ப வேண்டும்.

மேலும் பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். எனவே செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர் மாணவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக நடுவில் வெள்ளிக்கிழமை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் வியாழன், வெள்ளி், சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுப்பு கிடைத்தது. அது போல் இந்த ஆண்டும் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிக்கலாம் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வேறொரு சனிக்கிழமை அன்று பணி நாளாக தமிழக அரசு அறிவிக்கலாம் என பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதுகுறித்து அரசு என்ன முடிவு எடுக்கும் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+