Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் உருவாகப்போகும் அதிநவீன கிரிக்கெட் மைதானம்.. எங்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 9 லட்சத்தை கிரிக்கெட் மைதானம் அமைக்க ஒதுக்கி உள்ளார்.இந்த நிதியை பயன்படுத்தி சென்னை மாநகராட்சி, கோபாலபுரத்தில் நவீன வசதிகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்க முடிவு செய்துள்ளது.

சென்னையை விளையாட்டுகளுக்கு உகந்த சிறந்த நகரமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் அரசின் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இளம் விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கிலும், நல்ல இடத்தில் பயிற்சி பெற வேண்டும் என்ற நோக்கிலும் விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகள் தமிழக வீரர்கள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரியபயிற்சி மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

Do you know about the cricket stadium that is going to be built in Gopalapuram, Chennai?

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செம்பியத்தில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கும்பணி நடந்து வருகிறது. இதுதவிர சென்னையில் 83 மைதானங்களை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதனிடையே சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானம் சீர் செய்யப்படாமல் குப்பை, கிடங்கு போல் கிடந்தது.இதனை பார்த்த ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 9 லட்சத்தை கிரிக்கெட் மைதானம் அமைக்க ஒதுக்கி உள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தேனாம்பேட்டை மண்டலம், 111-வது வார்டில் கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இந்த மைதானத்தில் 3-ல் 2 பங்கு இடத்தில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.

அதற்கான நிதியை ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ ந.எழிலன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 9 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குத்துச்சண்டை மையம்: இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சி பெறும் வகையில், இந்த விளையாட்டு மைதானத்தில் 3-ல் ஒரு பங்கு பகுதியில் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த 2 பணிகளும் முடிவடையும் போது, இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டுப் பயிற்சியையும், குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சியையும், இதர வகையான விளையாட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்."இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+