தமிழ்நாட்டில் உருவாகப்போகும் அதிநவீன கிரிக்கெட் மைதானம்.. எங்கு தெரியுமா?
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 9 லட்சத்தை கிரிக்கெட் மைதானம் அமைக்க ஒதுக்கி உள்ளார்.இந்த நிதியை பயன்படுத்தி சென்னை மாநகராட்சி, கோபாலபுரத்தில் நவீன வசதிகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்க முடிவு செய்துள்ளது.
சென்னையை விளையாட்டுகளுக்கு உகந்த சிறந்த நகரமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் அரசின் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இளம் விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கிலும், நல்ல இடத்தில் பயிற்சி பெற வேண்டும் என்ற நோக்கிலும் விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகள் தமிழக வீரர்கள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரியபயிற்சி மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செம்பியத்தில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கும்பணி நடந்து வருகிறது. இதுதவிர சென்னையில் 83 மைதானங்களை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதனிடையே சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானம் சீர் செய்யப்படாமல் குப்பை, கிடங்கு போல் கிடந்தது.இதனை பார்த்த ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 9 லட்சத்தை கிரிக்கெட் மைதானம் அமைக்க ஒதுக்கி உள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தேனாம்பேட்டை மண்டலம், 111-வது வார்டில் கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இந்த மைதானத்தில் 3-ல் 2 பங்கு இடத்தில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.
அதற்கான நிதியை ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ ந.எழிலன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 9 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குத்துச்சண்டை மையம்: இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சி பெறும் வகையில், இந்த விளையாட்டு மைதானத்தில் 3-ல் ஒரு பங்கு பகுதியில் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த 2 பணிகளும் முடிவடையும் போது, இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டுப் பயிற்சியையும், குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சியையும், இதர வகையான விளையாட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்."இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications