Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பி வைத்ததே எஸ்.பி. வேலுமணிதான் என்றும், எடப்பாடி பழனிசாமி திருந்தவே மாட்டார். அவரால் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் தற்போது அதிமுகவுக்குள் எழுந்துள்ள உள் முரண்பாடுகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளரான புகழேந்தி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நிருபர்களிடம் பேசியபோது, அதிமுக தலைமை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

pugazhendi admk

அவர் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக தமிழகத்தில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் நிலை ஏற்படும் என்று எச்சரித்தார். கட்சியை பாஜகவுக்கு அடமானம் வைத்து விட்டதாகவும், அதிமுகவின் அடிப்படை கொள்கைகளை பலவீனப்படுத்தி வருவதாகவும் விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமி தனது நெருங்கியவர்களின் முதுகில் குத்தும் தன்மை கொண்டவர் என்றும் தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பி வைத்ததே எஸ்.பி.வேலுமணிதான் என எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. கோவை ஈஷா யோகா மையத்தில் பிரேமலதாவை சந்தித்து வேலுமணி இப்படி சொன்னதாக எனக்கு சிலர் கூறியிருந்தனர் என புகழேந்தி குறிப்பிட்டார்.

மேலும் என்டிஏ கூட்டணிக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அதிமுக அந்த கூட்டணியில் இணைந்ததை என்னால் ஒப்புக் கொள்ளவே முடியாது என்றார். பிரேமலதா திமுக அணியில் இணைந்தது தமிழக அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணிக்கு சவால் அதிகரித்துள்ள நிலையில், கட்சியின் ஒற்றுமை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

புகழேந்தியின் இந்த கருத்துகள் அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கடந்த காலங்களில் கொடநாடு வழக்கு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளால் ஏற்கனவே பாதிப்படைந்துள்ள அதிமுக, தற்போது உள் குழப்பங்களால் மேலும் சிக்கலில் சிக்கியுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணி வலுவடைந்து வரும் சூழலில், எதிர்கால தேர்தல்களில் அதிமுகவின் நிலை என்ன என்பது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய விமர்சனங்கள் கட்சியின் தலைமைக்கு சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன.

தமிழக அரசியல் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பியது. இப்போது எழுந்துள்ள இந்த பிரச்சனைகள் அதிமுகவின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூரு புகழேந்தி (வா. புகழேந்தி) என அறியப்படும் இவர், தமிழக அரசியலில் அதிமுகவுடன் நீண்ட காலம் தொடர்புடையவராக இருந்தவர். அவர் புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்தக் கட்சி மார்ச் 4ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முன்பு அதிமுகவில் இருந்தவர். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், கர்நாடகா மாநில அதிமுக மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்தார். தொடக்கத்தில் சசிகலா ஆதரவாளராக இருந்தார்.
பின்னர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணியில் இணைந்து செயல்பட்டார்.

ஓபிஎஸ் திமுகவில் இணைந்த பிறகு, அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தார்.
அதிமுகவை பாஜகவுக்கு அடமானம் வைத்துவிட்டதாகவும், கொள்கைகளை பலவீனப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி வந்தார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ்ஸின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த அவர், தனியாக புதிய கட்சியை உருவாக்கியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக அதன் பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வந்தது. இந்த நிலையில் இந்த சட்டசபை தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த தேர்தலில் ராஜ்யசபா சீட் விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் திமுகவுடன் தேமுதிக முதல் முறையாக கூட்டணி அமைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+