Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையின் பெரிய சிக்னல் எது தெரியுமா? தப்பிதவறி மேம்பாலத்தில் ஏறாவிட்டால் அவ்வளவு தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நகருக்குள் இருக்கும் சிக்னல்களில் எல்லாம் இப்போது பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் இல்லை.. தாம்பரம் மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காமாட்சி மருத்துவமனை சிக்னலும், ஈச்சங்காடு ஜங்சனும் தென்சென்னை மக்களை கலங்க வைத்துள்ளது. அவ்வளவு எளிதாக இந்த சாலைகளை கடந்து சென்றுவிட முடியாது.

சென்னையை விட சென்னையின் புறநகர் பகுதிளான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவிட்டார பகுதிகளில் தான் வாகன நெரில் கடுமையாக உள்ளது. உதாரணத்திற்கு செல்வது என்றால், சோழிங்கநல்லூரில் உள்ள ஒருவர் ஈக்காட்டு தாங்கல் வர கண்டிப்பாக ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். காலை மற்றும் மாலை நேரங்களில் பயணம் கடுமையாக இருக்கும்..

Do you know the biggest signal of Chennai How about Echangadu Junction and Kamachi Hospital Junction

இதேபோல் தாம்பரம் மற்றும் வேளச்சேரி இடையேயும் பயணம் எளிதாக இருக்காது. சென்னையில் ஓஎம்ஆர் சாலை, ரேடியல் சாலை, சோழிங்கநல்லூர் கீழ்கட்டளை சாலை, வேளச்சேரி பள்ளிக்கரணை சாலை போன்ற பகுதிகளில் வாகன நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இத்தனைக்கும் ரேடியல் சாலை, வேளச்சேரி பள்ளிக்கரணை சாலை போன்றவை மிகப்பெரிய அகலம் உடையவை.. இங்கு மேம்பாலங்களும் இருக்கிறது. ஆனாலும் நெரிசல் குறையவே இல்லை..

காமாட்சி மருத்துவமனை சிக்னலை எடுத்தக் கொண்டால், பல்லாவரம் குரோம்பேட்டை தாம்பரம் செல்ல பலரும் ரேடியல் சாலையை பயன்படுத்துகிறார்கள். அலுவலகம் செல்ல ஓஎம்ஆர் சாலைக்கு போக பயன்படுத்துகிறார்கள்.. அந்த பக்கம் பள்ளிக்கரணை, மேடவாக்கம் செல்லவும், இந்த பக்கம் வேளச்சேரி கிண்டி, அடையாறு செல்லவும் முக்கியமான சந்திப்பாக காமாட்சி மருத்துவமனை சிக்னல் இருக்கிறது. காமாட்சி மருத்துவமனை சிக்னலில் 4 பக்கமும் வாகனம் கடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால் சிக்னலை கடக்க நீண்ட நேரம் ஆகிறது. இதற்கு மாற்றுத்தீர்வை உருவாக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கிறார்கள். காமாட்சி மருத்துவனை பகுதியில் உள்ள சாலையில யூடர்ன் அமைத்தால் போக்குவரத்து சிக்னல் பிரச்சனை கணிசமாக குறையும் என்று வாகன ஓட்டிகள் தெரிவிக்கிறார்கள்..

இது ஒருபுறம் எனில், கீழ்க்கட்டளை ஈச்சங்காடு சந்திப்பில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சாலையில் எந்த பக்கம் வாகனத்தை ஓட்டவும் 5 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக வாகன ஓட்டிகள் சொல்கிறார்கள்.அந்த பகுதியில் சிக்னலே 5 நிமிடம் வரை இருப்பதாகவும் புலம்புகிறார்கள்..

மெட்ரோ பணிகள் காரணமாக மிகச்சிறிய அளவிலேயே சாலை உள்ளதால் கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் தாம்பரம் நோக்கி செல்பவர்கள் அங்கு தப்பிதவறி மேம்பாலத்தில் ஏறாமல் கீழே சென்றால், நெரிசலில் நீண்ட நேரம் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது. சென்னையில் இதை விட பெரிய சிக்னல் இல்லை என்று அந்த வாகன ஓட்டிகள் புலம்புகிறார்கள். அவ்வளவு நேரம் காத்திருக்கும் நிலை இருப்பதாக சொல்கிறார்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+