சென்னை ஜெயஸ்ரீ ஆடிய சதுரங்கவேட்டை.. கோடிகளை சுருட்டி பலே கேடித்தனம்.. வசமாக சிக்கிய வங்கி ஊழியர்
சென்னை: சென்னை சூளைமேட்டில் தனியார் வங்கியில் பணியாற்றிய பெண் ஊழியர், மூதாட்டியை ஏமாற்றி ரூ.2½ கோடியை சுருட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி, ரூ.2.65 கோடியை வாங்கிய முன்னாள் வங்கி ஊழியர்,. வெறும் 64 லட்சம் ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு அப்படியே பணத்தை சுருட்டி இருக்கிறார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் பூர்ணிமா நீத்து என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் பூர்ணிமா நீத்து கூறுகையில், என்னுடைய தாயார் சாந்தகுமாரிக்கு (வயது 66) ஜெயஸ்ரீ என்பவர் அறிமுகமானார். ஜெயஸ்ரீக்கு 39 வயதாகிறது. இவர் சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
என் அம்மா சாந்தகுமாரியிடம் ஜெயஸ்ரீ வந்து, தானும் தன் குடும்பத்தினரும் இணைந்து வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால், அதில் வரும் லாபத்தில் பங்கு தருவதாகவும் ஆசை காட்டினார். இதை உண்மை என்று நம்பி எனது தாயாரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூ.2.65 கோடி ஜெயஸ்ரீயின் குடும்ப நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் லாப பங்கு தொகை என்று ரூ.64 லட்சத்தை எனது தாயாருக்கு ஜெயஸ்ரீ கொடுத்திருக்கிறார். ஆனால் அதன்பிறகு லாப பங்கு தொகை என்று எந்தவித தொகையும் கொடுக்கவில்லை. முதலில் முதலீடு செய்த ரூ.2.65 கோடியையும் முறையாக திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். மேலும் அவர் பார்த்த வங்கி வேலையையும் ஜெயஸ்ரீ விட்டுவிட்டார். ரூ.2.65 கோடியை மோசடி செய்த ஜெயஸ்ரீ மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து தரவேண்டிய பணத்தை வசூலித்து தரும்படி வேண்டுகிறேன்" இவ்வாறு பூர்ணிமா நீத்து தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மோசடி செய்ததற்காக முகாந்திரம் இருந்ததால்,. மோசடி புகாரின்பேரில், முன்னாள் வங்கி ஊழியர் ஜெயஸ்ரீயை கைது செய்தனர்.
-
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications