ஆகஸ்ட் 20ல் மதுரையில் அதிமுக மாநாடு.. 10 லட்சம் பேருக்கு மெனு தயார்!.. என்னென்ன சாப்பாடு தெரியுமா?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து முதல்முறையாக மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு வரும் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்பியதால் அதிமுகவுக்கு பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். ஓபிஎஸ் பக்கம் கணிசமான பொதுக் குழு உறுப்பினர்களோ எம்எல்ஏக்களின் ஆதரவுகளோ இல்லாத நிலை உள்ளது. எனினும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என ஓபிஎஸ் கூறி வருகிறார்.
இந்த நிலையில் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தங்களது செல்வாக்கை நிரூபிக்க அவர் கணிசமான இடங்களில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அது போல் ஓபிஎஸ்ஸும் சுயேச்சை சின்னத்திலோ அல்லது அமமுகவுடன் கூட்டணி அமைத்தோ எடப்பாடியை விட தங்களுக்கே செல்வாக்கு அதிகம் என நிரூபிக்க முயலுவார் ஓபிஎஸ்.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து முதல்முறையாக மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு வரும் 20ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மதுரை மாநாட்டில் தொண்டர்கள் திரள வைக்க போகிறார்கள்.
தொண்டர்கள் குடும்பம் சகிதமாக மாநாட்டுக்கு வர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து சுமார் 10 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை ரிங் ரோட்டில் உள்ள வலையன்குளம் பகுதியில் அமைந்துள்ள மாநாட்டு மைதானம் சுமார் 50 ஏக்கர் பரப்பில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டு திடலில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மாநாட்டு திடலில் ஆங்காங்கே தொண்டர்களுக்கு உணவு வழங்கும் வகையில் 250 கவுன்ட்டர்கள் அமைத்து உணவு பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவுன்ட்டர்களிலும் 6 பேர் பணியமர்த்தப்பட்டு தொண்டர்களுக்கு உணவுகளை விரைவாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம் என 3 வகையான சாதங்கள் தொண்டர்களுக்கு உணவாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3000 மூட்டை அரிசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. சாப்பிடுவதற்காக ஏராளமான யூஸ் அன்ட் த்ரோ தட்டுகள், தணணீர் அருந்த வாட்டர் பாட்டில்கள் வாங்கப்பட்டுள்ளன.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications