கணவனின் பெண்கள் லிஸ்ட்.. இரவெல்லாம் அழுத மனைவி.. அந்த செல்போனை பார்த்தால்? ஆடிப்போன சென்னை காசிமேடு
சென்னை: இளம்பெண் எடுத்த முடிவை கண்டு, சென்னைவாசிகள் அதிர்ந்துபோயுள்ளனர்.. பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகார் தொடர்பாக காசிமேடு போலீசாரும் தீவிரமான விசாரணையை முன்னெடுத்து வருகிறார்கள். என்ன நடந்தது?
சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வருபவர் நவீனா.. 30 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் நம்பிராஜன்.. திருமணம் நடந்து 7 வருடங்களாகிறது.. இருவருமே ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. இவர்களுக்கு தற்போது 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

சந்தேகம்: திருமணமாகி சில வருடங்கள் தம்பதி இருவருமே மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.. ஆனால், கடந்த சில மாதங்களாகவே நம்பிராஜன் நடத்தையில் திடீர் மாற்றம் தென்பட்டது. இதனால், சந்தேகமடைந்த நவீனா, ஒருநாள், கணவரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.. அதில் சோதனை செய்தபோது, பல பெண்களுடன் நம்பிராஜனுக்கு தொடர்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதுமட்டுமல்ல, தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறி பெண்களிடம் பழகி வந்துள்ளார்.. மேலும் சிலரிடம் தமக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்றும் சொல்லியிருக்கிறார்..
தகாத உறவு: இப்படி பல பெண்களிடம் தகாத தொடர்பில் இருப்பதை கண்டறிந்ததுமே, நவீனாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. எனவே, இதுகுறித்து கணவரிடமே நேரடியாக கேட்டுள்ளார். அப்போதிருந்தே நவீனாவிற்கும் நம்பிராஜனுக்கும் தகராறு வெடித்துள்ளது. நம்பிராஜனும் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இந்த சண்டை முற்றிவிட்டது. இதில், தன்னை கேள்வி கேட்பதால் ஆத்திரமடைந்த நம்பிராஜன், நவீனாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.. இதில் மனமுடைந்த நவீனா, இரவெல்லாம் அழுதுகொண்டேயிருந்தார்.. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார்..
ஆர்டிஓ : தன்னுடைய புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. நவீனாவின் சடலத்தை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கலங்கடித்துவிட்டது.. பின்னர் தங்கள் மகள் மரணம் குறித்து, காசிமேடு போலீசில் பெற்றோர் புகார் தந்ததையடுத்து, விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது.. ஆனால், நவீனாவிற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் இன்னும் முடிவடையாததால், தண்டையார்பேட்டை ஆர்டிஓ விசாரணையும் இதில் நடத்தப்பட்டு வருகிறது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications