கரண்ட் கம்பத்தை பார்த்துமே.. நாய் ஏன் காலை தூக்குது தெரியுமா?.. அட இப்படி ஒரு மேட்டர் இருக்கா
சென்னை: நாய்கள் மின் கம்பம், கார் டயர்களில் சிறுநீர் கழிப்பதை பார்த்திருக்கிறீர்கள், அது ஏன் என தெரியுமா?
ஓர் அறிவு முதல் 6 அறிவு வரை உயிர்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் 5 அறிவு ஜீவனுக்கும் 6 அறிவு ஜீவனுக்கும் உள்ள வித்தியாசம் பெரும்பாலும் சிந்திக்கும் திறன், வாய் பேசுதல் என்பதைத்தான் சிலர் சொல்கிறார்கள்.

ஆனால் 5 அறிவு ஜீவராசிகளுக்கும் பாசம், நேசம், நட்பு, பகை என இருக்கின்றன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நாய்களை சொல்லலாம். இவை பாசத்தை அதிக அளவில் வெளிப்படுத்தும். வளர்ப்பு நாயாக இருந்தாலும் தெரு நாய்களாக இருந்தாலும் உப்பிட்டவரை மறக்காதவைகளாக உள்ளன.
நன்றிக்கு எடுத்துக்காட்டாக நாய்களைத்தான் சொல்வார்கள். அந்த வகையில் நாய்கள் செய்யும் சில வித்தியாசமான பழக்கங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் அது எதற்காக என ஆராய்ந்ததில்லை. அந்த வகையில் நாய்கள் மின்சார கம்பிகள், கார் டயர்களில் சிறுநீர் கழிக்கும்.
ஆனால் இது ஏன் என பலருக்கு தெரியாது. எத்தனையோ இடங்கள் இருந்தாலும் அவை அந்த இடங்களைத்தான் தேடி போய் சிறுநீர் கழிக்கும். இது நாய்களின் பழக்கம். வீடுகளில் கூட வெளியே வாக்கிங் அழைத்து செல்லும் போது இந்த நாய்கள் வீட்டு வாசலில் கூட சிறுநீர் கழித்துவிட்டு வரும்.
இது பகைக்காகவும் நட்புக்காகவும் என்றும் கூறுகிறார்கள். அதாவது கார் டயர்கள், மின் கம்பங்களில் சிறுநீர் கழிப்பதன் மூலம் ஏய் இது என் ஏரியா, உள்ள வராதே என மற்ற நாய்களுக்கு எச்சரிக்கும் விதத்திலும் எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் மற்ற நாய்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த சிறுநீர் வாசனையை வைத்து இங்கு நமக்கு நண்பனோ எதிரியோ இருக்கிறது என்பதை மற்ற நாய்கள் தெரிந்து கொள்ளும். இந்த சிறுநீரானது நாய்களுக்கு தகவல் தொடர்பாக இருக்கின்றன. நாய்கள் எப்போதுமே தட்டையான தளங்களை விட சாய்வுதளங்கள் மீது சிறுநீர் கழிக்கவே விரும்பும்.
ரப்பர் டயர்களில் நாய்கள் சிறுநீர் கழித்தால் அது நீண்ட நேரம் இருக்கும். ஆனால் தரைகளில் கழித்தால் அது சில மணிகளில் காற்றில் கலந்து வாசனை இல்லாமல் போய்விடும். மேலும் ரப்பரின் வாசனையும் நாய்களுக்கு மிகவும் பிடிக்கும். ரப்பர் டயர்கள், கரண்ட் கம்பங்களில் சிறுநீர் கழித்தால் நாய்கள் அதன் அருகே நின்றாலும் அந்த வாசனை மூக்கை துளைக்கும் அளவுக்கு இருக்கும். இதனால்தான் நாய்கள் கரண்ட் கம்பத்தை பார்த்து கால்களை தூக்கி சிறுநீர் கழிக்கின்றன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications