"ஆப்பு".. பிரபல நடிகருடன் சேரும் கட்சி..புது அணியா? சிக்குதா "சில்லுவண்டு".. குழம்பும் திமுக, அதிமுக
சென்னை: தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. இதுகுறித்து யூகங்களும், கணிப்புகளும் சோஷியல் மீடியாவில் வட்டமடிக்க ஆரம்பித்துவிட்டன.
கடந்த ஒரு வருட காலமாகவே, திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.. அதற்கேற்றவாறு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் சரி, தலைவர் அன்புமணியும் சரி, திமுகவை அவ்வளவாக விமர்சிக்காமலேயே இருந்து வருகிறார்கள். வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் காரணமாக, திமுகவிடம் இணக்கமான போக்கை, பாமக கையில் எடுப்பதாக கருதப்பட்டது.

அதுமட்டுமல்ல, அன்று, அக்கட்சி நடத்திய அவசர செயற்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசும்போது, "தம்பி ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், வெற்றி பெறத் தேவையான தேவையான புள்ளி விவரங்கள் அறிக்கையை ஒரே வாரத்தில் கூட தயார் செய்ய முடியும். இதனை அவர் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று பேசியிருந்ததையும் நாம் இங்கு நினைவில் கூறவேண்டியுள்ளது.
திமுக கூட்டணி: எனினும், நெய்வேலி பிரச்சனையை பாமக கையில் எடுத்து போராட்டத்தை நடத்தியதால், திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றே கணிக்கப்பட்டது.. இப்போது, பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துள்ளதால், தன்னுடைய கூட்டணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமியும், தன்னுடைய கூட்டணியை தக்க வைக்க வேண்டிய நெருக்கடியில் முதல்வர் ஸ்டாலினும் உள்ளனர். எனவே, இரு தரப்பின் கவனமும் பாமக மீது விழுந்துள்ளது.
நேற்று முன்தினம், அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்து பேசியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.. ஒருவேளை, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், முரண்டு பிடித்தால், பாமகவுக்கான ஆதரவு கதவை திமுக திறந்துவிடவும் தயாராக இருப்பதாக தெரிகிறது. இதே முயற்சியைதான் அதிமுக தரப்பும் மேற்கொண்டு வருகிறது.
யாருடன் கூட்டணி: எனினும், தமிழகத்தில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்ககூடிய இடத்தில் பாமக திகழ்ந்து வருகிறது. தனக்கான வாக்குகளையும் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. அந்தவகையில் பாமகவின் ஆதரவு யாருக்கு கிடைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு கூடிவருகிறது. மற்றொருபக்கம், பாமகவின் "டிமாண்டும்" அதிகமாகவே இருப்பதாக தெரிகிறது.
ஒரு சமூகத்துக்கு மட்டும் இடஒதுக்கீடு தந்துவிட்டால், மற்ற சமூகங்களும் தனித்தனியாக உள் ஒதுக்கீடு கேட்டு வந்துவிட்டால் என்னாவது? என்ற எண்ணம் திமுக மேலிடத்துக்கும் இருக்கவே செய்கிறது.
நடிகர் விஜய்: ஒருவேளை, திமுக, அதிமுக என இரு தரப்புடனுமே கூட்டணி வைக்காமல் போனால், தனி கூட்டணி அமைத்து போட்டியிடவும் பாமக தயாராகும் என்கிறார்கள்.. அதற்கேற்றவாறு, அன்புமணிக்கு, போனை போட்டு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உள்ளார்..
இதுவரை எந்த அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாளுக்குமே, நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்ததில்லை.. இப்போதுதான் முதல்முறையாக இந்த வழக்கத்தை கையில் எடுத்துள்ளார்.. கடந்த ஆகஸ்ட் 17ம்தேதி விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.. அப்போதே இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது..
ஹேப்பி பர்த்டே: இந்த வாழ்த்துக்கு பின்னணியில், அரசியல் நோக்கம் இருப்பதாகவே கருதப்பட்டன.. இதைத்தொடர்ந்து நேற்று, அன்புமணிக்கும் வாழ்த்து சொல்லியிருப்பது, அரசியல் அரங்கில் மீண்டும் அனலை கூட்டியுள்ளது.. அப்படியானால், திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது சாத்தியமாகாவிட்டால், தனி கூட்டணி அமைக்கவும் பாமக ஆலோசித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், விஜய்யின் இந்த வாழ்த்து மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வளர்த்த கடா: அதுமட்டுமல்ல, திருமாவுக்கு வாழ்த்து சொன்ன விஜய், தன்னை "தூக்கிவிட்ட" தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என்ற கேள்வி அப்போதே கிளம்பியது. விஜயகாந்த் என்ற மாபெரும் மனிதர் அன்று இல்லாவிட்டால், இன்று விஜய் என்ற மிகப்பெரிய சக்தி தமிழகத்துக்கு கிடைத்திருக்க மாட்டார்.. வளர்த்த கடா மார்பிலே பாயுதே? என்றெல்லாம் விவாதங்களும் வெடித்தன.
ஆனால், வரப்போகும் தேர்தலை முன்னிறுத்தி நடிகர் விஜய், அரசியலில் தீவிரம் எடுக்க நேர்ந்தால், தேர்தலில் விஜய் போட்டியிட நேர்ந்தால், தேமுதிகவும் அவருடன் இணைந்து செயல்படும் என்றும், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக, விஜய் + விஜய்காந்தின் தொண்டர்கள் மிகப்பெரிய மாற்றத்தை விதைப்பார்கள் என்றும் ஒரு டாக் ஓடிக்கொண்டிருக்கிறது.
குழப்பம்: ஆக நடிகர் விஜய், பாமக அன்புமணிக்கும் வாழ்த்து சொல்லி உள்ளார், விசிக திருமாவளவனுக்கும் வாழ்த்து சொல்லி உள்ளார்.. அதேபோல, தேர்தல் அரசியலை விஜய் கையிலெடுத்தால், தேமுதிகவுடன் இணைவாரா? பாமகவுடன் இணைவாரா? என்பதும் குழப்பமாகவே உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications