11 மணி நேரம் பணி! வரலாறு காணாத செவிலியர் போராட்டம் வெடிக்கும்! சுகாதாரத்துறையை விளாசும் ரவீந்திரநாத்
சென்னை: பிரசவ அறைகளின் தரத்தை மேம்படுத்துதல் திட்டம் என்ற பெயரில், அதில் தொடர்புடைய செவிலியர்களின் பணி நேரம் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை என மறைமுகமாக திணிக்கப்படுவதாக சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தரத்தை உயர்த்துதல் என்ற பெயரில் , செவிலியர்களின் பணி நேரத்தை இரண்டு மடங்காக உயர்த்துவது என்ன நியாயம்? என அவர் வினவியுள்ளார்.
இது தொடர்பாக சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

பிரசவ அறைகள்
''LaQshya Scheme என்ற பெயரில், அதாவது பிரசவ அறைகளின் தரத்தை மேம்படுத்துதல் திட்டம் என்ற பெயரில், இத்திட்டத்தில் தொடர்புடைய செவிலியர்களின் பணி நேரம் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை என மறைமுகமாக திணிக்கப்படுகிறது. இது செவிலியர்களின் உரிமைகளுக்கு எதிரானது. பகலில் 6.00 மணி நேர வேலை, இரவில் 12.00 மணி நேர வேலை என்பதற்கு எதிரானது.''

செவிலியர்கள் பணி நேரம்
பிரசவ அறைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அது தாய்மார்களின் நலன் கருதி,பிறக்கும் குழந்தைகளின் நலன் கருதி உயர்த்தப்பட வேண்டும். ஆனால், இந்த தரத்தை உயர்த்துதல் என்ற பெயரில் , செவிலியர்களின் பணி நேரத்தை இரண்டுமடங்காக உயர்த்துவது என்ன நியாயம்?''

எது சிறந்த மாடல்?
''அதுவும் இதற்கு எந்தவித கூடுதல் ஊதியமும் இல்லை. மிரட்டி, கட்டாயப்படுத்தி,எந்த வித எழுத்துப் பூர்வ உத்தரவும் இன்றி பணிநேரம் உயர்த்தப்பட்டுள்ளது. செவிலியர்களின் உழைப்பை இவ்வாறு கடுமையாக சுரண்டுவது, மனித உரிமைகளை மீறுவது எவ்வாறு சிறந்த முன்மாதிரியாக இருக்கும்? எட்டு மணி நேர வேலையை 6 மணி நேரமாக குறைத்தால் அது சிறந்த மாடல்! 6 மணி நேர வேலையை 12 பணி நேரமாக உயர்த்துவது எவ்வாறு சிறந்த மாடலாக இருக்க முடியும்?''

போராட்டம் வெடிக்கும்
''இங்கு ஏதோ ஓர் சிறந்த மாடல், இந்தியாவிலேயே ,ஏன் உலகத்திலேயே இல்லாத ஹெல்த் மாடல் இருப்பதாக வாய்கிழிய பேசுவோர் இதற்கு பதில் அளிப்பார்களா? பெண் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதுதான் சிறந்த மாடலா? பதிலை எதிர்பார்க்கிறோம். பணி நேர உயர்வு ரத்தையும் எதிர்பார்க்கிறோம். இல்லை எனில்... வரலாறு காணாத அளவில் செவிலியர் போராட்டம் வெடிக்கும். அது நமது "மாடலின்" முகத்திரையை கிழிக்கும்.'' இவ்வாறு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications