அடுத்த இடி.. ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட் இன்று முதல் டபுள் மடங்காக உயர்வு.. கொந்தளிக்கும் பயணிகள்
பிளாட்பார்ம் டிக்கெட் இன்று முதல் 20 ரூபாயாக உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: இன்று முதல், 2023 ஜனவரி 31-ம் தேதி வரையில் 4 மாதங்களுக்கு ரயில்வே நடைமேடை கட்டணத்தை 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பண்டிகை காலம் தொடங்கிவிட்டது.. அந்தவகையில், இன்று முதல், 5-ம் தேதி வரையில் சனி, ஞாயிறு, ஆயுத பூஜை என்று தொடர்ச்சியாகப் பண்டிகை வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால், சென்னையிலிருந்து பஸ், ரயில்களில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டு வருகிறார்கள்.

ரயில்வே அதிரடி
பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. எப்போதுமே, இதுபோன்ற விழா நாள்களில், சென்னையிலிருந்து ரயில்கள் மூலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்வார்கள்.. இவர்களை வழியனுப்ப, அவர்களுடன் சொந்தக்காரர்களும், நண்பர்களும் செல்வார்கள்... இவர்களுக்காக நடைமேடை கட்டணம், அதாவது பிளாட்பார்ம் டிக்கெட் 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

டபுள் மடங்கு
அந்த கட்டணம்தான் இதுவரை வசூலிக்கப்பட்டும் வருகிறது.. வழியனுப்ப வருபவர்களுக்கு 10 ரூபாய் என்பது அதிக கட்டணம் என்று பரவலான கருத்து கூறப்பட்டு வந்தது.. ஆனால், இன்று முதல் அந்த கட்டணம் டபுள் மடங்காக உயர்கிறது.. அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து 2023 ஜனவரி 31-ஆம் தேதி வரையில் 4 மாதங்களுக்கு ரயில்வே நடைமேடை கட்டணத்தை 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டிருந்தது..

கூட்ட நெரிசல்
அந்த அறிவிப்பில், "விழாக் காலங்களில் கூட்டத்தை தவிர்க்க, சென்னை கோட்டத்திற்குட்பட்ட டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது அக்டோபர் 1 -ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை அமலில் இருக்கும்" என்று கூறப்பட்டிருந்தது.

கிறிஸ்துமஸ்
பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி பயணிகள் இடையூறு இல்லாமல் பயணிக்கவே நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா தெரிவித்திருந்தார். எனினும், தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் பிளாட்பாரம் கட்டண உயர்வுக்கு பயணிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எரிச்சல்
"பண்டிகை காலங்களில் பயணிகளுக்கு எரிச்சல் உண்டாக்கும், இந்த கட்டண உயர்வு உள்ளது.. பல ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்க நடைமேடையை கடந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதை சரிசெய்யாமல்., ஏதேதோ காரணத்தை சொல்லி கட்டணத்தை உயர்த்துவது சரியல்ல.. 10 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்கவே பலர் சிரமப்படும் நிலையில், இப்போது டபுள் மடங்காக உயர்த்தியிருப்பது சரியல்ல.. பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி அதிக வருவாய் ஈட்டுவதை விட்டுவிட்டு, கூடுதல் ரயில்கள் இயக்கி அதன் மூலம் வருவாயை அதிகரிக்கலாம்" என்று பரவலான கருத்துக்கள் எழுந்து வருகின்றன.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications