கண்ணகி சிலை அருகே குடிபோதையில் அரைநிர்வாணமாக பெண் மறியல்.. மெரினாவில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே பெண் ஒருவர் குடிபோதையில் அரை நிர்வாணமாக சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    கண்ணகி சிலை அருகே மது போதையில் பெண்.... அரை நிர்வாணமாக ரகளை செய்ததால் பரபரப்பு!

    நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் மெரினாவின் கண்ணகி சிலை அருகே கணவருடன் ஒரு பெண் வந்து அமர்ந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டார்.

    Drunkan Woman conducted road roko near Marina Kannagi statue

    மேலும் அந்த பெண் அரைநிர்வாணமாக அமர்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது. வாகனங்களுக்கு வழிவிடாமல் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தார். இது குறித்து அருகில் இருந்த போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீஸார் அங்கிருந்த அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது கணவரை யாரோ ஒருவர் தாக்கிவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    Drunkan Woman conducted road roko near Marina Kannagi statue

    அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் அந்த பெண் மெரினாவில் சாலையோர பகுதிகளில் வசித்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் அந்த பெண்ணையும் அவரது கணவரையும் போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

    இந்த பெண்ணின் மறியலால் கண்ணகி சிலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+