சென்னையில் விமான நிலையத்தில் இன்று மெட்ரோ ரயில் ரத்து.. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அறிவிப்பு
சென்னை: சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் உள்ளது. கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து மக்கள் மெட்ரோ ரயிலில் விரைவாக பயணித்து வருகின்றனர்.

தற்போது சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் ‛‛தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் விம்கோ நகர் டெப்போ முதல் மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயங்கி வருகிறது. இந்த சிரமத்துக்கு வருந்துகிறோம்'' என தெரிவித்துள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவை நிறுத்தத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்த பிறகு மீண்டும் சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications