சென்னையில் விமான நிலையத்தில் இன்று மெட்ரோ ரயில் ரத்து.. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அறிவிப்பு
சென்னை: சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் உள்ளது. கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து மக்கள் மெட்ரோ ரயிலில் விரைவாக பயணித்து வருகின்றனர்.

தற்போது சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் ‛‛தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் விம்கோ நகர் டெப்போ முதல் மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயங்கி வருகிறது. இந்த சிரமத்துக்கு வருந்துகிறோம்'' என தெரிவித்துள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவை நிறுத்தத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்த பிறகு மீண்டும் சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications