திமுகவுடன் இணைகிறதா மதிமுக? துரை வைகோ கொடுத்த ரியாக்சன் -திருமுருகன் காந்தி பதிவிட்ட உடனே நெகிழ்ச்சி
சென்னை: மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தெரிவித்து இருக்கும் நிலையில், அதற்கு எதிராக பதிவிட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நன்றி தெரிவித்து இருக்கிறார்.
மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, வைகோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கட்சியை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்று தெரிவித்து உள்ள நிலையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மதிமுகவுக்கு ஆதரவாக பதிவிட்டு இருந்தார். அதில், "வெற்றி, தோல்வி, பணபலம், அரசியல் அதிகாரம் என்பதைக் கடந்து எளிய மக்களுக்காக குரல் எழுப்ப தமிழகத்தின் அரசியல் தேவை 'மதிமுக'.

வெற்றி தோல்வி மட்டுமே ஒரு இயக்கத்தின் வரலாற்று இருப்பை உறுதி செய்துவிடாது. அரசியல் போக்கில் தாக்கத்தை கொண்டு வருவதில் அதனுடைய பங்கை பொறுத்தும், எத்தகைய மாற்றத்திற்காக போராடுகிறது என்பதுவுமே அதன் முக்கியத்துவத்தை சொல்லும். மதிமுக என்பது உருவாகி கடந்த 30 ஆண்டுகளில் அது வலியுறுத்திய அரசியலே அதனை பிற திராவிட கட்சிகளில் இருந்து வேறுபடுத்தியது.
90களில் கூர்மையடைய ஆரம்பித்த ஈழப்போராட்டம், தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகள் எனும் சூழலில் உருவான மதிமுக, பெரிய திராவிட கட்சிகளிலிருந்து வேறுபட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, அணு உலை எதிர்ப்பு, NLC, ஈழ விடுதலை போராட்ட நிலைப்பாடு என சூழலியல் அரசியல், தமிழின சார்பு வெளியுறவுக் கொள்கை என தம்மை பாதிக்கப்பட்ட மக்களின் சார்பு நிலைப்பாட்டினை எடுத்து போராடியது.
இவ்வகையில் எழுவர் விடுதலை, மீத்தேன் எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, முல்லைப்பெரியார் உரிமை மீட்பு, கெயில் குழாய் எதிர்ப்பு என பிற திராவிட தேர்தல் கட்சிகளின் அரசியலை மக்கள் நோக்கி நகர்த்தியது. இவ்விடயங்களில் எவ்வித கொள்கை நிலைப்பாடும் எடுக்காத பிற திராவிட கட்சிகள் மக்களிடமிருந்து அன்னியமாகின. கடந்த 30 வருடங்களில் 2016க்குப் பின்னரே இந்த நிலைப்பாடுகளில் திமுக நிலைப்பாடு எடுக்க முயன்றது.
2010-20 வரையிலான நெருக்கடியான காலகட்டத்தில் போராட்ட அரசியலை கைக்கொண்டு நின்றது மதிமுக. சாஞ்சியில் ராஜபக்சேவை எதிர்கொள்ள தொண்டர் படையை நகர்த்தியது, ஸ்டெர்லைட்டை தடை செய்ய நீதிமன்றம் சென்றது, ப்ரஸ்ஸல்ஸில் பொதுவாக்கெடுப்பை ஈழத்திற்கு கோரியது, புலிகள் மீதான தடைக்கு எதிராக நேரடியாக வழக்காடியது, மூவர் தூக்கை ரத்து செய்ய வழக்காடியது, நியூட்ரினோவிற்கு தடை வாங்கியது என நீதிமன்றப் போராட்டங்கள் மக்கள் திரள் போராட்டத்துடன் இணைந்து நடத்தியது.
கெயில் குழாய்க்கு எதிராகவும், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பிலும் மதிமுகவின் மூத்த பொறுப்பாளர்கள் திரு. கணேசமூர்த்தியும், திரு. மல்லை சத்யாவும் நேரடியாகவே பங்காற்றினர், மல்லை சத்யா சிறையும் சென்றார். இவ்வகையில் அக்கட்சியின் மூத்த முக்கிய நிர்வாகிகள் போராட்ட களத்தில் எதிர்பார்ப்பின்றி பங்காற்றியவர்கள். தடா, பொடா எனும் அடக்குமுறை சட்டங்களை எதிர்கொண்டவர்கள். மாவட்டம், பகுதி சார்ந்து மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள்.

இவை எவற்றிற்காகவும் பிரதிபலனை மக்களிடத்தில் கோரியதில்லை இவர்கள். சாமானியர்களுக்காகவும், சமூக செயற்பாட்டாளர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து அவர்களுக்கு துணையாக நின்றார்கள். இன்றும் இம்மரபை தொடர்கிறார்கள். இந்த அரசியல் திராவிடர் இயக்க, பெரியாரிய அரசியலோடு நெருக்கமானது. இப்படி தனித்துவமான அரசியலை கொண்டதாக மதிமுகவையும், அதன் தொண்டர்களையும் வார்த்தார் ஐயா.வைகோ.
இவ்வகை அரசியலை கையில் எடுக்காமல் போனால் மக்களிடம் வெற்றி பெற இயலாது எனும் நிலையிலேயே ஆண்ட, ஆளும் திராவிட கட்சிகள் இந்த அரசியல் பக்கம் நகர ஆரம்பித்துள்ளன. அவ்வகையில் பெரிய திராவிட கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்தது மதிமுக. வெற்றி, தோல்வி, பணபலம், அரசியல் அதிகாரம் என்பதைக் கடந்து எளிய மக்களுக்காக குரல் எழுப்ப தமிழகத்தின் அரசியல் தேவை 'மதிமுக'." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இந்த பதிவை பேஸ்புக்கில் பகிர்ந்து நன்றி தெரிவித்து உள்ளார் துரை வைகோ. அதில், "மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் உன்னதமான தொண்டர்களின் சார்பாக சகோதரர் திருமுருகன் காந்தி அவர்களின் பதிவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications