எதிர்க்கட்சி தலைவரும் வேறு கட்சித் தலைவரும் ஒரே விமானத்தில், விடுதியில் இருக்க கூடாதா?- துரைமுருகன்
சென்னை: எதிர்க்கட்சித் தலைவரும் வேறு கட்சித் தலைவரும் ஒரே விமானத்தில் விடுதியில் இருக்க கூடாதா என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாலினும் தினகரனும் மதுரையில் ஒரே விடுதியில் தங்கி ரகசிய கூட்டணிக்கான பேரம் பேசி வருவதாக நமது அம்மா நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதை அமமுக கட்சியின் சார்பில் தங்கதமிழ்ச் செல்வன் மறுத்திருந்தார்.
மேலும் வழக்கமாக ஸ்டாலின் தங்கும் விடுதியில் அறை காலியாக இல்லாததால் அவர் தினகரன் தங்கியிருந்த ஹோட்டலில் தங்கியதாக தகவல்கள் வெளியாகின.
[செல்லூர் ராஜூவுக்கே தெரியாமல் மதுரைக்குள் ஊடுருவிய டெங்கு, பன்றிக் காயச்சல்!]
அனைத்து கட்சி
அதுபோல் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதி மற்றும் ஏற்கெனவே காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதை விரைந்து நடத்திட அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இடைத்தேர்தல்
சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் துரைமுருகன். அவர் கூறுகையில், 18 தொகுதிகளுக்கு முதலில் இடைத் தேர்தல் நடக்கட்டும்.
டெங்கு
இடைத் தேர்தல் அறிவித்த பிறகுதான் எந்த முடிவையும் எடுப்போம். எல்லாக் காய்ச்சலும் தமிழ்நாட்டில்தான் வருகிறது. வருஷா வருஷம் தவறாமல் வந்து விடுகிறது டெங்கு. பன்றி காய்ச்சல் மற்றும் டெங்குவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரகசியம்
எல்லாமே அதிமுக ஆட்சியில்தான் வருகிறது. மு.க.ஸ்டாலினும் தினகரனும் ரகிசயமாக சந்தித்தது கற்பனையே. எதிர்கட்சித் தலைவரும் வேறு கட்சி தலைவரும் ஒரே விமானத்தில் ஒரே விடுதியில் இருக்கக் கூடாதா என துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.