துரைமுருகன் மகனுக்கு அடித்த ஜாக்பாட்... சென்னை கோட்டத்தில் முக்கிய பதவி
Recommended Video
சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகன் மகனும், வேலூர் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்துக்கு தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் பதவி கிடைத்திருக்கிறது.
வேலூர் தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி.யானவர் கதிர் ஆனந்த். தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு வரை பார்ப்பதற்கு அமைதியாகவும், யாரிடமும் நெருங்கிப் பழகத் தெரியாதவராகவும் இருந்த அவர் இன்று அவரது தந்தையையே அரசியலில் விஞ்சிவிடுவார் போல் தெரிகிறது.

மக்களவை உறுப்பினராக வெற்றிபெற்று இன்னும் பதவியேற்றுக்கொள்ளாத நிலையில், கதிர் ஆனந்த் தென்னகரயில்வேயில் முக்கிய பதவியை பெற்றிருப்பது திமுக சீனியர் எம்.பி.க்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் என்ற பதவியை தயாநிதிமாறன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கதிர் ஆனந்த அந்தப் பதவியை பெற்றிருக்கிறார்.
துரைமுருகன் ஏன் இப்படி செய்கிறார், ஒரு சீனியர் நிர்வாகிக்கு தெரியவேண்டாமா இவ்வளவு பெரிய முக்கிய பதவியை அரசியலில் சூப்பர் ஜூனியருக்கு கொடுக்கலாமா என்று, வடதமிழக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலுவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்களாம்.
தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் பதவி என்பது மிகுந்த அதிகாரம் மிக்க ஒன்று என்றும், புதிய திட்டங்களை கொண்டு வருவதில் இந்தப் பதவியில் இருப்பவர்கள் முக்கிய பங்காற்ற முடியும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications