தந்தை பெரியார் மீது அவதூறு- நடிகர் ரஜினிகாந்த் மீது தி.வி.க. மீண்டும் வழக்கு
சென்னை: தந்தை பெரியார் குறித்து அவதூறு பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகம் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ல் சேலத்தில் பெரியார் தலைமையிலான மாநாட்டில் ராமர் படம் செருப்பால் அடிக்கப்பட்டது; ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக கொண்டுவரப்பட்டன என பேசியிருந்தார்.

ரஜினிகாந்த் இப்படி பேசியது உண்மைக்கு புறம்பானது; தவறான தகவல் என திராவிடர் இயக்கத்தினர் மறுத்தனர். இதனால் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தாம் பேசியது சரியே என்பதால் மன்னிப்பு கேட்கவே முடியாது என கூறினார்.
இதற்கு ஆதாரமாக அவுட்லுக் இதழில் வெளியான ஒரு கட்டுரையையும் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டினார். இதுவும் மிகப் பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் தந்தை பெரியாரை அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகத்தின் பல நகரங்களில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தந்தை பெரியார் மிகப் பெரும் தலைவர்; அவரை அவதூறாக பேசியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியது. மேலும் ரஜினிகாந்த் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அவகாசம் கொடுத்துவிட்டு மீண்டும் வழக்கு தொடரலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
இதனால் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் அப்போது மனுவை திரும்பப் பெற்றனர். இந்நிலையில் சென்னை எழும்பூர் மெட்ரோபாலிடன் 2-வது நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இம்மனு மீது வரும் 7-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
இதுதான் விடாது கருப்பு!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications