வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்.. மின்சார வாகன இ-சார்ஜிங் பாயிண்ட்.. தமிழக அரசு வழிகாட்டி நிறுவனம் செம
சென்னை: தமிழகத்தில் இ-சார்ஜிங் பாயிண்ட் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இது பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் அளித்து வருகிறது.
இ-மின்சார வாகனங்களின் எண்ணிக்கை என்பது சமீப காலமாகவே அதிகரித்து உள்ளது.. இதற்கான தேவைகளும் பொதுமக்களிடம் பெருகியபடியே உள்ளது.. நம்முடைய நாட்டை பொறுத்தவரை, மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை பெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு நிறுவனங்கள் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வமும் காட்டி வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் வரை 10.44 லட்சம் மின்சார வாகனங்கள் இந்தியாவில் விற்பனை ஆகி உள்ளன. இதில், தமிழகத்தில் 4.14 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன.
சார்ஜிங் பாயிண்ட்: எனவே, தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாட்டில், ஹைவேஸ்களில், 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது.. அதாவது, வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாய்ண்ட் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.
சார்ஜிங் மையம்: அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்காக தமிழ்நாடு மின்வாரியம் தேசியநெடுஞ்சாலைகளில் சார்ஜிங் மையங்களை அமைக்க திட்டமிட்டது. அதன்படியே, தேசிய நெடுஞ்சாலைகளில் தலா 25 கிமீ தூரத்துக்கு ஒரு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் இடங்களை தேர்வு செய்யும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டதுடன், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க 100 இடங்களை கண்டறிந்து, அதற்கான டெண்டர் விடப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
சார்ஜிங் சென்டர்: சென்னையை பொறுத்தவரை, மெட்ரோ ரயில் நிலையம், சில வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்க்குள் போன்றவற்றில் பொது சார்ஜிங் மையங்கள் உள்ளன... இதுபோலவே, மற்ற மாவட்டங்களிலும், ஒரு சில இடங்களில் சார்ஜிங் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.. ஆனால், அவையெல்லாம் எங்கிருக்கின்றன என்ற சரியான விபரம், நிறைய பேருக்கு தெரிவதில்லை.
அதனால்தான், சார்ஜிங் மையம் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், இதற்காகவே பிரத்யேகமாக தனி வெப்சைட் ஒன்றை கொண்டு வர முடிவு செய்துள்ளது. அநேகமாக, இந்த வருட இறுதிக்குள், தனி இணையதளம் மற்றும் மொபைல் செயலி இரண்டையுமே செயல்பாட்டிற்கு கொண்டு வர போகிறதாம்.
சபாஷ் முடிவு: அதில், சார்ஜிங் மையங்கள் எந்தெந்த இடத்தில் உள்ளன? எவ்வளவு கி.மீ. தூரத்தில் உள்ளன? என்பது உள்ளிட்ட விபரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம் என்றும், இந்த அதிரடிகள் பொதுமக்களுக்கு மிகுந்த வசதியை பெற்றுத்தரும் என்றும் நம்பப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications