அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம்
சென்னை: ஐடி நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது தற்போது இயல்பானதாக மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை, ஆரக்கிள் நிறுவனத்திலிருந்து மொத்தம் 30,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 12,000 பேர்.
அதிகாலை 5-6 மணிக்கு மொத்த ஊழியர்களுக்கும் மெயில் வந்திருக்கிறது. இந்த மெயிலில், ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மெயில் வந்த அடுத்த நொடியிலிருந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் லாக்-இன் செயல்பாடு முடக்கப்பட்டிருக்கிறது.

ஆரக்கிள் நிறுவனத்தின் அராஜகம்
ஐடி நிறுவனங்கள் என்றாலே பணி நீக்கம் என்பது எழுதப்படாத விதியாக மாறியிருக்கிறது. இதனை தற்போது இருக்கும் நிறுவனங்கள் நார்மலைஸ் செய்து வருகின்றன. இதை எதிர்த்து எந்த அரசியல் தலைவர்களும் நாடாளுமன்றத்தில் பெரியதாக பேசுவதாக தெரியவில்லை. எனவே பணி நீக்கங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆரக்கிள் நிறுவனம் அராஜகம் செய்து வருகிறது.
இந்திய ஊழியர்கள்
இன்று அதிகாலை, அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் சுமார் 18% அதாவது, 30,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் இந்தியாவை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 12,000. இந்த பணி நீக்கத்திற்கு காரணம், அந்நிறுவனம் ஏஐ-ல் அதிக முதலீடு செய்திருப்பதுதான். பழைய தொழில்நுட்பங்களை முற்றிலுமாக நீக்கி, ஏஐ சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு இந்நிறுவனம் பழகி வருகிறது. எனவே பழைய தொழில்நுட்பத்தில் வேலை பார்த்தவர்கள் கொத்தாக தூக்கப்பட்டிருக்கிறார்கள்.
இழப்பீடு அறிவிப்பு
வேலையை விட்டு தூக்கப்பட்டவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் கூடிய இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு 15 நாட்கள் சம்பளம் இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு ஊழியர் இந்த நிறுவனத்தில் 10 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறார் எனில்,
10*15=150 - அதாவது 5 மாத சம்பளம்
மனிதாபிமானம் இல்லாத செயல்
இந்த தொகை இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மாத காலம் நோட்டீஸ் அவகாசம், பணிக்கொடை மற்றும் விடுப்பு ஊதியம், கூடுதலாக இரண்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் தானாகவே முன் வந்து ராஜினாமா செய்பவர்களுக்குதான் இந்த சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் சோகம் என்னவெனில், கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றிய மூத்த ஊழியர்கள் கூட எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்பதுதான். இந்த பணி நீக்கம் இந்திய ஐடி துறையில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications