Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐடி நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது தற்போது இயல்பானதாக மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை, ஆரக்கிள் நிறுவனத்திலிருந்து மொத்தம் 30,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 12,000 பேர்.

அதிகாலை 5-6 மணிக்கு மொத்த ஊழியர்களுக்கும் மெயில் வந்திருக்கிறது. இந்த மெயிலில், ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மெயில் வந்த அடுத்த நொடியிலிருந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் லாக்-இன் செயல்பாடு முடக்கப்பட்டிருக்கிறது.

Oracle Layoffs

ஆரக்கிள் நிறுவனத்தின் அராஜகம்

ஐடி நிறுவனங்கள் என்றாலே பணி நீக்கம் என்பது எழுதப்படாத விதியாக மாறியிருக்கிறது. இதனை தற்போது இருக்கும் நிறுவனங்கள் நார்மலைஸ் செய்து வருகின்றன. இதை எதிர்த்து எந்த அரசியல் தலைவர்களும் நாடாளுமன்றத்தில் பெரியதாக பேசுவதாக தெரியவில்லை. எனவே பணி நீக்கங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆரக்கிள் நிறுவனம் அராஜகம் செய்து வருகிறது.

இந்திய ஊழியர்கள்

இன்று அதிகாலை, அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் சுமார் 18% அதாவது, 30,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் இந்தியாவை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 12,000. இந்த பணி நீக்கத்திற்கு காரணம், அந்நிறுவனம் ஏஐ-ல் அதிக முதலீடு செய்திருப்பதுதான். பழைய தொழில்நுட்பங்களை முற்றிலுமாக நீக்கி, ஏஐ சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு இந்நிறுவனம் பழகி வருகிறது. எனவே பழைய தொழில்நுட்பத்தில் வேலை பார்த்தவர்கள் கொத்தாக தூக்கப்பட்டிருக்கிறார்கள்.

இழப்பீடு அறிவிப்பு

வேலையை விட்டு தூக்கப்பட்டவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் கூடிய இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு 15 நாட்கள் சம்பளம் இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு ஊழியர் இந்த நிறுவனத்தில் 10 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறார் எனில்,

10*15=150 - அதாவது 5 மாத சம்பளம்

மனிதாபிமானம் இல்லாத செயல்

இந்த தொகை இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மாத காலம் நோட்டீஸ் அவகாசம், பணிக்கொடை மற்றும் விடுப்பு ஊதியம், கூடுதலாக இரண்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் தானாகவே முன் வந்து ராஜினாமா செய்பவர்களுக்குதான் இந்த சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் சோகம் என்னவெனில், கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றிய மூத்த ஊழியர்கள் கூட எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்பதுதான். இந்த பணி நீக்கம் இந்திய ஐடி துறையில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+