பிரபல தமிழ் நடிகை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. யார் இந்த அருணா? பின்னணி
சென்னை: தமிழ் சினிமாவில் 1980 காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அருணா வீட்டில் இன்று திடீரென்று அமலாக்கத்துறையினர் சோதனையை தொடங்கி உள்ளனர். சென்னை ஈசிஆர் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலை 7 மணிக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் 80ஸ் காலக்கட்டத்தில் நடிகையாக வலம் வந்தவர் அருணா. இவரை தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குநர் பாரதிராஜா. தமிழில் ‛கல்லுக்குள் ஈரம்' என்ற திரைப்படத்தின் மூலம் அருணா என்ட்ரி கொடுத்தார்.

அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் அருணா நடித்தார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நடிகர் விஜயகாந்தின் சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, பாக்கியராஜின் டார்லிங் டார்லிங் டார்லிங், கார்த்திக்குடன் கேள்வியுடன் நானே பதிலும் நானே, நடிகர் சிவாஜி நடித்த முதல் மரியாதை உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பெரும்பாலான படங்களில் 2ம் கதாநாயகி, துணை நடிகையாக நடித்து புகழ் பெற்றார். அருணாவின் கணவர் பெயர் மோகன் குப்தா. இவர் வீட்டின் உள்கட்டமைப்புகளில் அலங்கார பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடிகை அருணாவின் வீட்டில் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவை சேர்ந்த அருணா சென்னையில் செட்டில் ஆகி உள்ளார். அருணா சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், கேசினோ ட்ரைவ் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று காலை 7 மணிக்கு அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறையின் 4 அதிகாரிகள் சென்று சோதனையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications