அமைச்சர் நேரு வீட்டில் அதிரடி ரெய்டு.. மளமளவென குவிந்த ஆதரவாளர்கள்! பதற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டை மேற்கொண்டிருக்கிறார்கள். இதனையடுத்து அவரது வீட்டிற்கு முன்னால் ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்திருக்கின்றனர்.

ஆதரவாளர்களில் ஒருவர் கறுப்புக்கொடி காட்ட முயன்றார். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. எனவே அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

KN Nehru tamil nadu ED

அதிகாலையில் நேருவின் சகோதரருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களின் சென்னை அலுவலகங்களில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான வங்கி கணக்கில் இருந்து அதிக அளவு பணப்பரிமாற்றம் சந்தேகத்தை கிளப்பியிருப்பதாகவும், எனவேதான் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான அடையாறு எம்.ஆர்.சி.நகரில் உள்ள TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் முதலில் ரெய்டு தொடங்கியது. பின்னர் நேருவின் மறைந்த சகோதரர் ராமஜெயம் வீட்டிலும் அதை தொடர்ந்து தற்போது நேருவின் வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+