அதிர்ந்த அதிமுக.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 11 மணி நேரம் நடந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை வியாழக்கிழமை இரவு முடிவுக்கு வந்தது.
அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். அதிமுகவில் மிக முக்கிய நபராக இருக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் வியாழக்கிழமை காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. 3 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுரை மற்றும் சென்னையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 8க்கும் மேற்பட்டோர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர்.
விஜயபாஸ்கர் வீட்டில் ஈடி சோதனை: விஜயபாஸ்கர் வீட்டில் இதற்கு முன்பாக வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறையும் சோதனை நடத்தியிருந்தது. ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை மேற்கொண்டு இருந்தனர்.
எதற்காக சோதனை?: இந்த நிலையில்தான், தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் சூழலில் விஜபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தற்போது சோதனை நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விராலிமலை எம்.எல்.ஏ ஆவாக இருக்கும் சி விஜயபாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆர் கே நகர் தேர்தல் பண பட்டுவாடா புகார் தொடர்பாகவும், குட்கா முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர்.
ஐடி சோதனையின் தொடர்ச்சியா?: சோதனையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில், தற்போது விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை, மதுரையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான திருவேங்கை வாசலில் உள்ள கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவைவிட அதிகப்படியான கற்கள் வெட்டி எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவரது குவாரியிலும் ஏற்கனவே ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். எனவே, அந்த சோதனையின் தொடர்ச்சியாக அமலாக்கத்துறையினர் தற்போது கல்குவாரியிலும் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அமலாகக்த்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியான பிறகே சோதனைக்கான முழு விவரம் தெரியவரும்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்! -
தீயாய் வேலை செய்யும் திமுக..ஆமை வேகத்தில் அதிமுக! இப்படியே போனால் அவ்வளவு தான்? எடப்பாடிக்கு பிரஷர்! -
"அண்ணன் எடப்பாடியாரே.. எச்சரிக்கையா இருங்க”.. நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை.. திருமாவளவன் வார்னிங்! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி












Click it and Unblock the Notifications