கணிப்புகளை தகர்த்தெறிந்து... 3 ஆண்டுகாலத்தை நிறைவு செய்யும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: மூன்று மாதங்களில் அதிமுக ஆட்சி கவிழும் என ஆருடங்கள் கூறப்பட்ட நிலையில், அதனை தகர்த்தெறிந்து மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி மூன்று ஆண்டுகளில் தன்னை ஒரு சாணக்கியனாகவும் வளர்த்துக்கொண்டார்.
ஆட்சிக்கு கடும் நெருக்கடியும், இக்கட்டும் ஏற்பட்ட தருணத்தில் துளியும் யோசிக்காமல் தினகரனை ஒதுக்கிவிட்டு ஓ.பி.எஸ்.சுடன் கைகோர்த்தது, எம்.எல்.ஏ.க்களை தக்கவைத்தது, என பல உதாரணங்களை கூறலாம்.

முதல்வர் எடப்பாடி
தமிழக முதலமைச்சராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்று வரும் பிப்ரவரி மாதத்துடன் மூன்றாண்டு காலம் நிறைவடைகிறது. 3 மாதமோ, நான்கு மாதமோ தான் அதிமுக ஆட்சி இருக்கும் என அப்போது ஆருடங்கள் கூறப்பட்டன. ஆனால், தனது கெட்டிக்காரத்தனமான செயல்பாட்டால் கணிப்புகளையும், ஆருடங்களையும் தூள் தூளாக்கி மூன்றாண்டு காலத்தை நிறைவு செய்கிறார்.

தக்கவைப்பு
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தனது ராஜதந்திரத்தால் தன் வசப்படுத்தியது, ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுடன் கைகோர்த்தது, வலுவான கூட்டணி அமைத்தது, டெல்லி அரசியலை லாவகமாக கையாள்வது என பல விவகாரங்களிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டார்.

பதில்கள்
அதேபோல் முதலமைச்சராக பதவியேற்ற புதிதில் செய்தியாளர்களை சந்திக்கிற போது ஒரு வித பதற்றத்துடன் பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இப்போது நின்று, நிதானமாக, தெளிவாக பதில்களை டான் டான் என்று கூறுகிறார். மேலும், சிக்கலான பல கேள்விகளையும் எளிதாக கையாள்கிறார்.

ஆலோசனை
மேலும், மூத்த ஐ.ஏ.எஸ், அதிகாரிகளுடன் நட்பு பாராட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளை புறம்தள்ளாமல் அதனை பரிசீலிக்கிறார். பல திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பு அவர்களுடன் ஒரு முறை யோசனை கேட்கிறார். இதன்மூலம் பல அறிவிப்புகளை அவர் வெளியிடுகிறார். இதனிடையே இந்த மூன்றாண்டு கால ஆட்சியின் சிறப்புகளை கூற சாதனை மலர் ரெடியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications