சென்னையின் புறநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், வேளச்சேரி பள்ளிக்கரணை போன்ற பள்ளமான பகுதிகளும் மழை காலங்களில் வெள்ள நீர் தேங்குகினறன. இதனால் மக்கள் நீண்ட நாள் அவதிப்படும் சூழல் நிலவுகிறது.
இந்த விவகாரம் குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மழை நீர் தேங்காமல் இருக்க புறநகர் பகுதிக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
சென்னையில் அடர்த்தியான மழை பெய்தால் வேளச்சேரி முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் போன்ற பகுதிகள் வெள்ளக்காடாகுவது இயல்பாகிறது. ஏனெனில் இநத் பகுதிகள் எல்லாம் பள்ளத்தில் இருக்கின்றன. ஏரி மற்றும் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள் என்பதால் வெள்ளத்தில் சிக்குவது அடிக்கடி நடக்கிறது.

வேளச்சேரி
அண்மையில் நிவர் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையின் உள்பகுதிகளில் பெரிய பாதிப்பை ஏற்ப்டுத்தவில்லை. ஆனால் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. இதேபோல் வேளச்சேரியிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. வியாசர்பாடி, தண்டையார் பேட்டை, எண்ணூர் போன்ற பகுதிகளும் சில இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

முதல்வர்
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

குடியிருப்புகள்
அப்போது அவர் பேசுகையில், சென்னை, தாழ்வான பகுதியாக உள்ளது. குறிப்பாக வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி குடியிருப்புகளை பாதிக்கிறது. இந்த பகுதியில் மழை காரணமாக அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண உரிய திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

நிரந்தர தீர்வு
தொடர்ந்து கனமழை பெய்கின்ற தருணங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும். அங்கு தேங்கிய நீரை வெளியேற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி செயல்பட்டுள்ளது. இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அரசு உயர் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications