Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு vs டெல்லியா.. இது லோக்சபா தேர்தல் அல்ல.. சட்டசபைத் தேர்தல் ஸ்டாலின்.. எடப்பாடி ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026ல் நடக்கவிருப்பது சட்டசபைத் தேர்தல் என்று தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையிலான தேர்தல் என்று ஸ்டாலின் பேசி இருந்த நிலையில், இது சட்டசபைத் தேர்தல் என்பதே ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பல்லாவரத்தில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சட்டசபைத் தேர்தலின் போது திமுக 525 வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் 4ல் ஒரு பங்கு வாக்குறுதியை கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் 98% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார்.

Edappadi Palaniswami

அப்படியென்றால் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதுவரை வெளியிடப்படவில்லை.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது. இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு முக்கியக் காரணமே போதைப்பொருள் தான்.

அதேபோல் ஆட்சி முடிவடையும் போது அவசர அவசரமாக திட்டங்களை அறிவித்து திறந்து வைப்பது ஏன்? திமுக ஆட்சி முடிவடையும் தருவாயில் அவசர கோலத்தில் விடப்பட்ட டெண்டரை அதிமுக ஆட்சி அமைத்த பின் ரத்து செய்வோம். அதிமுகவை எதிர்க்கும் சக்தி ஆளும் திமுகவுக்கு இல்லை.. எதிர்க்கட்சியாக இருந்தால், பிரதமர் மோடிக்கு கருப்ப பலூன் பறக்கவிடுவார்கள்.

ஆளுங்கட்சியாக இருந்தால் வெள்ளைக் கொடை பிடிப்பார்கள். திமுக எப்போதும் இரட்டை நிலைப்பாடு எடுக்கும். அதிமுக கூட்டணியில் தோழமைக் கட்சிகளுக்கு தான் முக்கியத்துவம், அதேபோல் அரசு நிகழ்ச்சிகளில் கூட முதல்வர் ஸ்டாலின் அரசியல் பேசுகிறார். அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணிக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அந்தக் கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லை..

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் கமிஷன், கலக்‌ஷன், கரப்சன்.. நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என்று கூறி ஏமாற்றிவிட்டார்கள். மதுபான விற்பனையில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக பெற்று 5 ஆண்டுகளில் ரூ.24,500 கோடி முறைகேடு செய்துள்ளனர். இந்த தேர்தல் மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டுமென்ற தேர்தல் அல்ல.. சட்டசபைத் தேர்தல்.. இது தெரியாமல் தமிழ்நாட்டிற்கும் என்டிஏ-க்கும் போட்டி என்கிறார் ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+