முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி! அதிமுக அரசு செய்த மரியாதைகளை பட்டியலிட்டு பேட்டி
சென்னை: முத்துராமலிங்க தேவரின் 113 வது ஜெயந்தி விழா மற்றும் 58 வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அஞ்சலி செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என்று அப்போது அவர் பெருமிதம் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். முன்னதாக மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருந்தார்.

பசும்பொன்னில் நிருபர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: 1908ஆம் ஆண்டு பசும்பொன் கிராமத்தில் தேவர் பெருமகனார் பிறந்தார். இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களை எதிர்த்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து இளைஞர்களை திரட்டி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.

1920 ஆம் ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம் பகுதிகளில் நடைமுறையில் இருந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிராக தேவர் மேற்கொண்ட போராட்டம் முக்கியமான போராட்டமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேவர் திருமகனார் பிறந்ததும், மறைந்ததும் அக்டோபர் 30ஆம் தேதி. தனது வாழ்நாளில் 4 ஆயிரம் நாட்களை சிறையில் கழித்துள்ளார். தேவர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று எம்ஜிஆர் அறிவித்தார். 1979ஆம் ஆண்டு முதல் இதுவரை பசும்பொன் கிராமத்தில் அரசு விழாவாக தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதற்கு அதுதான் காரணம்.

சென்னையில் வெங்கல சிலை, தேவருக்கு தங்க கவசம் என அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications