Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தயாநிதி மாறன் பற்றி எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தை.. கோர்ட்டில் நடந்த பரபர வாதங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தன்னை விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

edappadi palaniswami dayanidhi maran aiadmk

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த திமுக எம்.பி தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். உண்மைக்கு மாறாகவும் தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாநிதி மாறன் நேரில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என அவரின் தரப்பு வழக்கறிஞர் கோரினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எடப்பாடி பழனிசாமியை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தார். அதற்கு விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், வழக்கு எண்ணிடக் கூடாது எனவே எந்த இந்த மனுவை ஏற்க கூடாது என தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

பின்னர் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு மீது வாதங்கள் நிறைவடைந்த நிலையில் அதன் மீது அக்டோபர் 16 ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும், வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்ததா என்பது தொடர்பாக இரு தரப்பும் வாதங்களை அடுத்த விசாரணையின் போது முன் வைக்க உத்தரவிட்ட நீதிபதி ஜெயவேல் விசாரணையை அக்டோபர் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+