Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஸ்டர் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி ஆஜர்? அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அவதூறு கேஸில் இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அறப்போர் இயக்கம் தெரிவித்த நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகாருக்கு எதிரான வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஹைகோர்ட்டில் கடந்த மாதம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் தமிழக அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

mhc edappadi palaniswami arappor iyakkam

புகார்கள்: ஏற்கனவே சாலைகள் நல்ல நிலையில் இருக்கும்போது, புதிதாக சாலை அமைப்பதாக கூறி பணத்தை மோசடி செய்ததாகவும், எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறையில் பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் தலைமை செயலாளர், நெடுஞ்சாலைத் துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றில் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.

அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தமது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், வேண்டுமென்றே அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி ஆவேசமடைந்தார்.. எனவே, தன்னை பற்றி பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி மான நஷ்ட ஈடுகோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

அறப்போர் இயக்கம்: அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்ததுடன், தனக்கு 1.10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க அறப்போர் இயக்கத்திற்கு உத்தரவிடுமாறும் எடப்பாடி கேட்டுக் கொண்டார். இதன் விசாரணையில் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசக் கூடாது என்று அறப்போர் இயக்கத்திற்கு ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது.

அதாவது, பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என சுப்ரீம் கூறியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி குறித்து பேச தடையும் விதிக்கப்பட்டது

இதுதொடர்பான மேல்முறையீட்டில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க இரண்டு நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக கடந்த நவம்பர் 19ம் தேதி எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் காலை ஆஜரானார்.

இன்று வழக்கு: இந்த வழக்கு நீதிபதி மகாலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தரப்பில் சாட்சியம் அளித்தார்.. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, எடப்பாடி பழனிச்சாமி டிசம்பர் 11 ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+