மாஸ்டர் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி ஆஜர்? அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அவதூறு கேஸில் இன்று விசாரணை
சென்னை: அறப்போர் இயக்கம் தெரிவித்த நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகாருக்கு எதிரான வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஹைகோர்ட்டில் கடந்த மாதம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் தமிழக அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

புகார்கள்: ஏற்கனவே சாலைகள் நல்ல நிலையில் இருக்கும்போது, புதிதாக சாலை அமைப்பதாக கூறி பணத்தை மோசடி செய்ததாகவும், எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறையில் பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் தலைமை செயலாளர், நெடுஞ்சாலைத் துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றில் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.
அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தமது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், வேண்டுமென்றே அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி ஆவேசமடைந்தார்.. எனவே, தன்னை பற்றி பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி மான நஷ்ட ஈடுகோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அறப்போர் இயக்கம்: அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்ததுடன், தனக்கு 1.10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க அறப்போர் இயக்கத்திற்கு உத்தரவிடுமாறும் எடப்பாடி கேட்டுக் கொண்டார். இதன் விசாரணையில் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசக் கூடாது என்று அறப்போர் இயக்கத்திற்கு ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது.
அதாவது, பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என சுப்ரீம் கூறியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி குறித்து பேச தடையும் விதிக்கப்பட்டது
இதுதொடர்பான மேல்முறையீட்டில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க இரண்டு நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக கடந்த நவம்பர் 19ம் தேதி எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் காலை ஆஜரானார்.
இன்று வழக்கு: இந்த வழக்கு நீதிபதி மகாலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தரப்பில் சாட்சியம் அளித்தார்.. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, எடப்பாடி பழனிச்சாமி டிசம்பர் 11 ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications