பொசுக்குன்னு காட்சி மாறுது பாருங்க! இதான் அறிகுறி.. மத்தியில் மாறும் ஆட்சி.. திமுக பிடித்த பாயிண்ட்
சென்னை: இந்தியா கூட்டணி கட்டாயம் ஆட்சியை பிடிக்கும் என்று திமுக அடித்து சொல்ல தொடங்கி உள்ளது. நேற்று நடந்த சம்பவம் ஒன்றை சுட்டி காட்டி திமுக இதை அடித்து சொல்ல தொடங்கி உள்ளது.
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.

கடந்த வாரம் 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது.
நேற்று 6ம் கட்ட தேர்தல் நடந்தது. நேற்று நடந்த ஆறாவது கட்டத் தேர்தலில் எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (UTs) மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நேற்று 6 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் தேர்தலை சந்தித்த 58 தொகுதிகளில் தோராயமாக 61.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இனி கடைசியாக 7ம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன.
விமர்சனம்; இதுவரை நடந்து முடிந்துள்ள 6 கட்ட வாக்குப்பதிவிலும், தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது. வாக்குப்பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பான விமர்சனங்களை அடுத்து, வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளுக்கு தற்போது முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணை நடந்தது. ஆனால் விசாரணையில் இறுதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. 17சி ஃபார்ம் அடிப்படையில் வாக்கு சதவீதத்தை வெளியிடுகிறீர்களா? அதில் ஏதேனும் தேர்தல் ஆணையத்துக்கு பிரச்னை உள்ளதா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இந்த ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை.
வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் முழுமையாக வெளியிடாதது தொடர்பாக எழுந்த தொடர் விமர்சனங்களை அடுத்து, 5 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளின் வாக்குப்பதிவு தொடர்பான முழு விவரங்களையும் தற்போது வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் தொடர்பாகவும் முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
திமுக உறுதி: இந்த நிலையில் இந்தியா கூட்டணி கட்டாயம் ஆட்சியை பிடிக்கும் என்று திமுக அடித்து சொல்ல தொடங்கி உள்ளது. நேற்று நடந்த சம்பவம் ஒன்றை சுட்டி காட்டி திமுக இதை அடித்து சொல்ல தொடங்கி உள்ளது.
இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை செய்துள்ள போஸ்டில் , உச்சநீதி மன்றத்தில் எத்தனை வாக்காளர்கள், எத்தனை பேர் வாக்களித்தார்கள் என சொல்ல முடியாது, சொன்னால் பல பிரச்சனைகள் வெடிக்கும் என உருட்டிய தேர்தல் ஆணையம், பொசுக்கென எல்லா விவரங்களையும் வெளியிட்டு விட்டது. ஏன்? இந்தியா கூட்டணி கட்டாயம் ஆட்சியை பிடிக்கும் என்பதால்தானே , என்று கூறி உள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications